பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154




நூ


நூரணிப் பெண் ஊருணி தாண்டாது.

(நூரணி மலையாளத்தில் உள்ளதோரூர்.)

நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு. 14725

(நல்வழி.)


நூல் இல்லாமல் மாலை கோத்தது போல.

நூல் இழந்த நங்கை போல.

நூல் கற்றவனே மேலவன் ஆவான்.

நூல் முறை அறிந்து சீலத்து ஒழுகு.

நூலுக்கு ஏற்ற சரடு. 14730


நூலும் சூலும் சேரக் கூடாது.

(நூல்-பூணூல் கல்யாணம்; சூல்-சீமந்தக் கல்யாணம்.)

நூலும் புடைவையும் நூற்றெட்டுக் காலமா?

நூலைக் கற்றோர்க்கு உண்டு நுண்ணறிவு.

நூலைப் போல் சேலை; தாயைப் போல் மகள்.

நூற்க வேண்டுமானால் வெண்ணெய்க் கட்டிபோல் நூற்கலாம். 14735


நூற்றில் ஒன்று; ஆயிரத்தில் ஒன்று.

நூற்றுக் கிழவி போல் பேசுகிறாள்.

(பேசுகிறாள்.)

நூற்றுக்கு இருந்தாலும் கூற்றுக்கு அறைக்கீரைதான்.

(இரைதான்.)

நூற்றுக்கு இருப்பார் ஐம்பதில் சாகார்.

நூற்றுக்கு ஒரு பேச்சு. 14740


நூற்றுக்கு ஒரு பேச்சு; ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு.

நூற்றுக்குத் துணிந்த துற்றுக் கூடை.

(கூற்றுக் கூடை.)

நூற்றுக்கு மேல் ஊற்று,

(+ ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.)