பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156


நெ


நெகிழ்ந்த இடம் கல்லுகிறதா?

நெகிழ்ந்த இடம் பார்த்துக் கல்லுவது போல. 14755


நெசவாண்டிக்கு ஏன் கோதிபில்லா?

(கோதிபில்லா-குரங்குக் குட்டி தெலுங்கு.)


நெசவு நெய்பவனுக்குக் குரங்கு எதற்காக?

நெஞ்சில் ஈரம் இல்லாதவன்.

நெஞ்சிலே கைவைத்துச் சொல்.

நெஞ்சு அறி துன்பம் வஞ்சனை செய்யும். 14760


நெஞ்சு அறியப் பொய் சொல்லலாமோ?

நெஞ்சு அறியாத பொய் இல்லை.

நெஞ்சு இலக்கணம் தெரியாதவனுக்குப் பஞ்ச லட்சணம் தெரிந்து பயன் என்ன?

நெஞ்சு ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.

நெஞ்சு மிக்கது வாய் சோறும். 14765


நெஞ்சைப் பஞ்சைப் போட்டுத் துவட்டியிருக்கிறது.

நெட்டி ஒரு பிள்ளை, சர்க்கரைக்குட்டி ஒரு பிள்ளையா?

நெட்டைக் குயவனுக்கும் நேரிட்ட கம்மாளனுக்கும் பொட்டைக்கும் புழு ஏர்வை.

நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பக்கூடாது.

நெடியார் குறியாரை ஆற்றிலே தெரியலாம். 14770


நெடுங்கடல் ஓடியும் நிலையே கல்வி.

நெடுங்காலம் நின்றாலும் நெல் முற்றிப் பணம் இரட்டி.

நெடுங் கிணறும் வாயாலே தூரும்.

நெடுந்தீவான் சரக்கு வாங்கப் போனது போல.

(சரக்கு-பிரசவ மருந்துச் சரக்கு; யாழ்ப்பாண வழக்கு.)

நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு. 14775


நெடு மரம் விழுந்தால் நிற்கிற மரம் நெடுமரம்,

நெய் இல்லாத உண்டி பாழ்.