தமிழ்ப் பழமொழிகள்
167
பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே.
பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு இரவில் எருமை மாடு தெரியுமா?
பகலில் பன்றி வேட்டைக்கு அஞ்சும் நாய், இரவில் கரித்துண்டுக்கு அஞ்சும். 15005
பகலை இருள் விழுங்குமா?
பகற் கனாப் போல,
பகிடியைப் பாம்பு கடித்தது போல,
- (பகடியை.)
பகிர்ந்து தின்றால் பசி ஆறும்.
பகுத்தறிவு இல்லாத துணிவு, பாரம் இல்லாத கப்பல். 15010
- (பகுத்தல் இல்லாத.)
பகுத்து அறியாமல் துணியாதே; படபடப்பாகப் பேசாதே.
- (செய்யாதே.)
பகுஜன வாக்யம் கர்த்தவ்யம்,
பகைக்கச் செய்யேல்; மறு ஜனனப்படு.
பகைத்தவர் சொல்லாதது இல்லை; பசித்தவர் தின்னாதது இல்லை.
பகைத்தவன் பாட்டைப் பகலில் கேள், 15015
பகைத்தால் உறவு இல்லை.
பகையாளிக்குப் பருப்பிலே நெய் விட்டது போல.
பகையாளி குடியை உறவாடிக் கெடு.
பகையாளி குடியைக் கெடுக்க வெங்காயக் குழி போடச் சொன்னது போல.
- (பங்காளி குடியை.)
பகையும் உறவும் பணம் பக்குவம். 15020
பகைவர் உறவு புகை எழா நெருப்பு.
- (எழு நெருப்பு.)
பகைவரிடம் நல்ல வார்த்தை சொன்னால் பொல்லாப்பு இல்லை.
பகைவன் இல்லாத ஊரில் குடி இருக்காதே.
பங்கறை சாவானுக்குப் பல்லழகைப் பார்.
- (பதங்குறைந்த.)
பங்கன் இருக்குமிடத்தைத் தேடிக் கங்கை வந்தது போல. 15025
- (பங்கன்-நொண்டி.)