பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

181



பண்ணப் பண்ணப் பல விதம் ஆகும்.

பண்ணாடி படியிலே பார்த்தால், ஆண் நடையிலே பார்த்துக் கொள்வான். 15355


பண்ணாடிக்கு மாடு போன கவலை; சக்கிலிக்குக் கொழுப்பு இல்லையே என்ற கவலை.

பண்ணிப் பார்த்தாற் போல.

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.

பண்ணிய பாவத்துக்குப் பயன் அநுபவித்தாக வேணும்.

பண்ணிய பாவத்தைப் பட்டுத் தொலைக்க வேண்டும். 15360


பண்ணி வைத்தாற் போல, பையனுக்கு ஏற்றாற் போல.

பண்ணின பொங்கல் பத்துப் பேருக்குத்தான்.

பண்ணைக் காரன் பெண்டாட்டி பணியக் கிடந்து செத்தாளாம்.

பண்ணெக்காரன் பெண்டு பணியக் கிடந்து செத்தாளாம், பரியாரி பெண்டு புழுத்துச் செத்தான்.

(யாழ்ப்பாண வழக்கு.)

பண்ணைப் பூப்போல நரைத்தும் புத்தி இல்லை. 15365


பண்ணையார் வீட்டு நாயும் எச்சில் இலை என்றால் ஒருகை பார்க்கும்.

பண ஆசை தீமைக்கு வேர்.

பணக் கள்ளி பாயிற் படாள்.

பணக்கார அவிசாரி பந்தியிலே; ஏழை அவிசாரி சந்தியிலே.

(விபசாரி.)

பணக்காரத் தொந்தி. 15370


பணக்காரன் பின்னும் பத்துப் பேர்; பயித்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.

(பணக்காரனைச் சுற்றி பைத்தியக்காரனைச் சுற்றி.)

பணக்காரன் பின்னே பத்துப் பேர்; பரதேசி பின்னே பத்துப் பேர்.

பணக்காரனுக்குத் தகுந்த பருப்புருண்டை; ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை.

பணக்காரனுக்குத் தகுந்த மண் உண்டை; ஏழைக்குத் தகுந்த எள் உருண்டை.

பணக்காரனுக்குப் பச்சிலை மருந்து சொல்லாதே. 15375


பணக்காரனுடன் பந்தயம் போடலாமா?

பணக்காரனும் தூங்கமாட்டான், பைத்தியக்காரனும் தூங்கமாட்டான்.