196
தமிழ்ப் பழமொழிகள்
பள்ளிக்கூடம் போகிறதற்கு முன்னே பயறு பயறு என்று சொன்னதாம்; பள்ளிக்கூடம் போன பிறகு பசறு பசறு என்றதாம்.
பள்ளி கெட்டால் பத்துச் சேர் மண்வெட்டி; பார்ப்பான் கெட்டால் சத்திரம் சாவடி.
பள்ளி கையில் பணம் இருந்தால் பாதி ராத்திரியில் பாடுவான்.
பள்ளி கொழுத்தால் பாயில் தங்கமாட்டான்; நண்டு கொழுத்தால் வளையில் தங்காது.
பள்ளிச் சிநேகிதம் பசுமரத்தாணி. 15735
பள்ளி தேய்த்திருக்கான்; பார்ப்பான் குளித்திருக்கான்.
பள்ளிப் பிள்ளை என்றால் செல்வம் குறையுமா?
- (செல்லம்.)
பள்ளிப் பிள்ளைக்குப் பகுத்தறிவு ஏது?
பள்ளி பாக்குத் தின்றால் பத்து விரலும் சுண்ணாம்பு,
பள்ளி புத்தி பறையன் பானையிலே, 15740
பள்ளி மச்சான் கதை போல.
பள்ளி முத்தினால் படையாச்சி.
பள்ளியை நினைத்துப் பாயில் படுத்தால் பரமசிவன் போல் கனவு வரும்.
- (பிள்ளை வரம்)
பள்ளியையும் இரும்பையும் பதம் பார்த்து அடி.
பள்ளியையும் பனங்காயையும் பதம் பார்த்து அடிக்கவேண்டும். 15745
பள்ளி வாழ்வு பத்து வருஷம்; பார்ப்பான் வாழ்வு முப்பது வருஷம்,
பள்ளி வெற்றிலை போட்டால் பத்து விரலும் சுண்ணாம்பு.
பள்ளி வைத்திய நாதன் கோயில்.
பள்ளுப் பறை பதினெட்டுச் சாதி.
பளியரிடம் புனுகு விற்றது போல. 15750
பற்றாததற்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திர நேரம் குடை.
- (யாழ்ப்பாண வழக்கு, பற்றாப் பொறுக்கிக்குப் பவிசு வந்தால் பாதி ராத்திரியிலே குடை.)
பற்றுக் கோலுக்கு என்று பிடித்தால் அரிவாள் பிடிக்கு வந்துநிற்கும்.
பற்றுப் பறக்கடிக்கும்; எச்சில் இரக்கப் பண்ணும்.
பற்று விட்டால் சித்தி.
- (சித்து.)
பறக்கிற குருவி சிறகிலே இறை கொண்டு போமா? 15755