பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தமிழ்ப் பழமொழிகள்



பனிக்குப் பலிக்கும் வரகு; மழைக்குப் பலிக்கும் நெல்.

பனி நீராற் பாவை செய்தாற் போல.

(தேவாரம்.)

பனிப் பெருக்கிலே கப்பல் ஓட்டலாமா? 15830


பனி பெய்தால் மழை இல்லை; பழம் இருந்தால் பூ இல்லை.

பனி பெய்தால் வயல் விளையுமா?

பனி பெய்து கடல் நிறையுமா?

பனி பெய்து குளம் நிரம்புமா? மழை பெய்து குளம் நிரம்புமா?

பனியால் குளம் நிறைதல் இல். 15835

(பழமொழி நானுாறு.)


பனியிலே கப்பல் ஓட்டலாமா?

பனியை நம்பி ஏர் பூட்டினது போல.

பனை அடியில் இருந்து பால் குடித்தாலும் சம்சயம்.

பனை ஆயிரம்; பாம்பு ஆயிரம்.

பனை இருந்தாலும் ஆயிரம் வருஷம்; இறந்தாலும் ஆயிரம் வருஷம். 15840


பனை ஏறியும் பானை தொடாது இறங்கினாற்போல.

(பானை தொடவில்லை.)

பனை ஏறி விழுந்தவனை ஆனை ஏறி மிதித்தது போல.

(பனையாலே விழுத்தவனை மாடேறி மிதித்தது போல.)

பனை ஏறுபவனை எந்த மட்டும் தாங்குகிறது?

பனை ஓலையில் நாய மொண்டது போல.

(கடா மூண்டது போல.)

பனைக்குப் பத்தடி. 15845


பனை நிழலும் நிழலோ? பகைவர் உறவும் உறவோ?

பனை நின்று ஆயிரம்; பட்டு ஆயிரம்.

(பனை நட்டு ஆயிரம்.)

பனை மட்டையில் மழை பெய்தது போல.

பனை மட்டையில் மூத்திரம் பெய்தது போல.

பனை மரத்தின்கீழ் இருந்து பாலைக் குடித்தாலும் கள் குடித்தான் என்பார்கள். 15850


பனை மரத்துக்கு நிழல் இல்லை; பறையனுக்கு முறை இல்லை.

(உறவு.)