தமிழ்ப் பழமொழிகள்
217
பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே.
- (வயிற்றிலே.)
பாழாய்ப் போகிறதைப் பசுவிடம் போடு; நாறிப் போகிறதை நாயிடம் போடு
- (பசுவின் வாயில்.)
பாழில் போட்டாலும் பட்டத்தில் போடு.
பாழுக்கு இறைத்த நீர் போல.
பாழுனைக் கண்டால் பள்ளனுக்கு ஆனந்தம். 16230
பாற் கடலைக் குமக்கப் பார்த்திடும் பூனை.
பானுவைக் கண்ட பனி போலை.
பானை ஒட்டினாலும் ஒட்டும்; மாமியார் ஒட்டாள்.
பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம்.
- (ஒரு பருக்கை.)
பானைப் பாலுக்கு ஒரு கொட்டு விஷம். 16235
பானை பண்ணுகிறவன் கையில் பானை உடையாது.
பானையில் அரிசி இருந்தால் பார்ப்பான் கண் உறங்கான்.
- (சோறு இருந்தால்.)
பானையில் இருந்தால் அல்லவோ அகப்பையில் வரும்?
பானையில் உண்டானால் அகப்பையில வரும்.
பானையில் இருந்தால் பார்ப்பான் கண் அடையாள். 16240
- (சோறு உள்ளவன். கண் உறங்காதாம்.)
பானையில் பதக்கு நெல் இருந்தால் மூலையில் முக்குறுணித் தெய்வம் கூத்தாடும்.
- (முக்குறுணிப் பேய்.)
பானையோடு தின்று பறையனோடு போகிறார்களா?
பானைவாயை மூடலாம்; பட்டணத்துவாயை மூடலாமா?
பாஷைக்குத் தப்பு வராத கண்டன்.