பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/237

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

தமிழ்ப் பழமொழிகள்



புதுக்கோட்டைக் கறுப்பண்ணனுக்கும் பூணைப் பார்; செட்டி நாட்டுத் தூணுக்கு உறையைப் பார்.

புதுக்கோட்டைப் புஷ்பவல்லியைப் பார்; தேவகோட்டைத் தேவடியாளைப் பார்,

புதுக்கோடி கிடைத்தாலும் பொன் கோடி கிடைக்காது.

புதுத்துடைப்பம் நன்றாய்ப் பெருக்கும்.

(சுத்தமாய்ப் பெருக்கும்.)

புதுப்பணக்காரனிடம் கடன் வாங்காதே. 16665


புதுப்பணம் படைத்தவன் அறிவானோ போன மாதம் பட்ட பாட்டை.

(யாழ்ப்பாண வழக்கு.)

புதுப்பானைக்கு ஈ சேராது.

புதுப்புனலும் புதுப்பணமும் மண்டையை இடிக்கும்; தொண்டையை அடைக்கும்.

புதுப் புடைவையிலே பொறி பட்டாற் போல.

புதுப் பெண் என்று தலை சுற்றி ஆடுகிறதா? 16670


புதுப் பெண்ணே, புதுப் பெண்ணே, நெருப்பு எடுத்து வா, உனக்குப் பின்னாலே இருக்கிறது செருப்படி.

புதுப் பெண் போல் நாணுகிறது.

(நாணிக் கோணுதல்.)

புதுப் பெண் மோடு தூக்கும்.

புது மண அறைப் பெண் போல நாணுகிறது.

புது மாட்டுப்பெண் மேட்டைத் துடைக்கும். 16675


புது மாடு குளிப்பாட்டுகிறது போல.

புது மாடு புல்லுப் பெறும்.

புதுமைக்கு வண்ணான் கரை கட்டி வெளுப்பான்; பழகப் பழகப் பழந் துணியும் கொடான்.

(பறை தட்டி அன்று வெளுப்பான். யாழ்ப்பாண வழக்கு.)

புதுமையான காரியந்தான் இந்தக் கலியுகத்தில்.

புது வண்ணான் கோணியும் வெளுப்பான். 16680


புது வாய்க்கால் வெட்ட வேண்டாம்; பழ வாய்க்கால் தூர்க்க வேண்டாம்.

புது வெள்ளத்தில் கெளுத்தி மீன் ஏறுவது போல,

புது வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தையும் அடித்துக்கொண்டு போயிற்று.