தமிழ்ப் பழமொழிகள்
35
தட்டான் பறந்தான் கிட்டமழை.
தட்டான் பொன் அறிவான்; தன் பெண்களுக்கு ஒன்று செய்யான்.
தட்டானிடம் இருந்தால் என்ன? கும்மிட்டியில் இருந்தால் என்ன? 11845
தட்டானுக்குப் பயந்தல்லவோ, அணிந்தான் சிவன் சர்ப்பத்தை?
தட்டானும் செட்டியும் ஒன்று ஆனால் தங்கம் கொடுத்தவன் வாயிலே மண்.
தட்டானும் செட்டியும் தலைப்பட்டாற் போல.
தட்டானும் செட்டியும் கண்; சட்டியும் பானையும் மண்.
தட்டானைச் சேர்ந்த தறிதலை. 11850
தட்டானைத் தலையில் அடித்து வண்ணாணை வழி பறித்தது.
- (வண்ணானை வழியிலே மறி.)
தட்டிக் கொடுத்தால் தம்பி தலைவிரித்து ஆடுவான்.
தட்டிப் பேச ஆள்இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
தட்டிப் போட்ட வடையைத் திருப்பிப் போட நாதி இல்லை.
- (ஆளும் இல்லை.)
தட்டிப் போட்ட வறட்டியைத் திருப்பிப் போட நாதி இல்லை. 11855
- (புரட்டிப் போட ஆள் இல்லை.)
தட்டினால் தட்டான்; தட்டா விட்டால் கெட்டான்.
தட்டுக் கெட்ட சால்ஜாப்பு.
தட்டுக் கெட்டு முறுக்குப் பாய்ந்து கிடக்கிறது.
தடவிப் பிடிக்க மயிர் இல்லை; அவள் பெயர் கூந்தல் அழகி.
தடவிப் பிடிக்க மயிர் இல்லை; அவன் பெயர் சவரிராஜப் பெருமாள். 11860
தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரனா?
- (செங்கல்பட்டு வழக்கு.)
தடி எடுத்தவன் தண்டல்காரன்.
தடிக்கு அஞ்சிக் குரங்கு ஆடினது போல.
தடிக்கு மிகுந்த மிடா ஆனால் என்ன செய்யலாம்?
- (தடிக்கு மிஞ்சின.)
தடிக்கு மிஞ்சின மாடா? 11865
தடிக்கு மிஞ்சின மிடாவானால் என்ன செய்யலாம்?
தடித் திருவாரூர்.