40
தமிழ்ப் பழமொழிகள்
தம்பி ரோசத்தில் ராஜபாளயத்தான்.
- (நாய் வகை.)
தம்பி வெள்ளோலை வாசிக்கிறான். 11970
- (வெள்ளோலை சங்கரமூர்த்தி வாசிக்கிறான்.)
தம்பி ஸ்ரீரங்கத்தில் கோதானம் கொடுக்கிறான்; தன்னைப் பெற்ற தாய் கும்பகோணத்தில் கெண்டிப் பிச்சை எடுக்கிறாள்.
- (கெஞ்சி.)
தம்ளர் தீர்த்தம் இல்லை; பேர் கங்கா பவானி.
தமக்கு மருவார் தாம்.
- (பழமொழி நானூறு.)
தமக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குக் சகுனப்பிழை வேண்டும்.
தமிழுக்கு இருவர் கதி. 11975
- (கதி-கம்பரும் திருவள்ளுவரும்.)
தமிழுக்கு இருவர்; தத்துவத்துக்கு ஒருவர்.
தமையன் தந்தைக்குச் சமம்; தம்பி பிள்ளைக்குச் சமம்.
தயிர் குடிக்க வந்த பூனை சட்டியை நக்குமா?
தயிர்ப் பானை உடைந்தால் காக்கைக்கு விருந்து.
தயிர்ப்பானையை உடைத்துக் காகத்துக்கு அமுது இட்டாற் போல. 11980
தயிர்ப் பானையை உடைத்து நாய்களுக்கு பங்கு வைத்தாற் போல.
தயிருக்குச் சட்டி ஆதாரம்; சட்டிக்குத் தயிர் ஆதாரம்.
- (ஆதரவு.)
தயிரும் பழையதும் கேட்டான்; கயிறும் பழுதையும் பெற்றான்.
தயை தாக்ஷிண்யம் சற்றாகிலும் இல்லை.
தர்மத்துக்கு அழிவு சற்றும் வராது. 11985
தர்மத்துக்கு உள்ளும் பாவத்துக்குப் புறம்பும்.
தர்மத்துக்குத் தாழ்ச்சி வராது.
தர்மத்துக்குத் தானம் பண்ணுகிற மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்க்கிறதா?
தர்மத்தைப் பாவம் வெல்லாது.
- (கொல்லாது.)
தர்ம புத்திரனுக்குச் சகுனி தோன்றினாற் போல. 11990
தர்மம் உள்ள இடத்தில் ஜயம்.
தர்மம் கெடின் நாடு கெடும்.
தர்மம் தலை காக்கும்.