தமிழ்ப் பழமொழிகள்
47
⬤
தள்ளாதவன் மனைவி பிள்ளைத்தாய்ச்சி; தள்ளிவிட்டு ஓடுதாம் குள்ளநரி.
தள்ளாவிட்டால் ஆசாரம் இல்லை; இல்லாவிட்டால் உபசாரம் இல்லை.
தள்ளாதவனுக்கு ஆசாரம் இல்லை; தரித்திரனுக்கு உபசாரம் இல்லை. 12145
- (இல்லாதவருக்கு )
தள்ளி ஊட்டினது தலைக்குட்டி.
தள்ளிப் பேசினாலும் தழுவிக் குழைகிறது.
- (குழைகிறதா?)
தளபதி இல்லாத தளம், கரை இல்லாத குளம்.
தளர்ந்த கிழவனுக்குச் சோறும், இடிந்த சுவருக்கு மண்ணும் உண்டானால் சில நாட்கள் நிற்கும்.
தறுதலைக்குத் தயவு ஏது? 12150
தறுதலைக்கு ராஜா சவுக்கடி.
தன் அழகு தனக்குத் தெரியாது.
தன் அறிவு வேணும்; இல்லை என்றால் சொல்லறிவு வேணும்.
தன் ஆள் இல்லா வேளாண்மையும்; தான் உழாத நிலமும் தரிசு.
தன் இச்சையை அடக்காவிட்டால் அது தன்னையே வருத்தும். 12155
- (ஆளும்.)
தன் இனம் தன்னைக் காக்கும்; வேலி பயிரைக் காக்கும்.
தன் உயிர் கருப்பட்டி.
- (வெல்லம்.)
தன் உயிர் தனக்குச் சர்க்கரை.
தன் உயிர் போல மண் உயிர் காக்க.
- (திணை. எண்ணுவர்.)
தன் உயிரைத் தின்கிறான். 12160
தன் உயிரைப் போல மண்ணுயிருக்கு இரங்கு.
- (மண்ணுயிரை நினை. மண்ணுயிரையும் காக்கவேண்டும்.)
தன் ஊர் கிழக்கு, தங்கின ஊர் மேற்கு, வேட்டகம் தெற்கு, வேண்டா ஊர் வடக்கு.
- (தலைவைத்துப் படுக்கும் திசை.)
தன் ஊர்ச் சுடுகாட்டுக்கும் அயல் ஊர் ஆற்றுக்கும் அஞ்ச வேண்டும்.
தன் ஊரில் தாய் அடிக்காதவன் அயலூரில் ஆனை அடித்தானாம்.
தன் ஊருக்கு அன்னம், பிற ஊருக்குக் காகம். 12165