பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தமிழ்ப் பழமொழிகள்


தேடப் போன மச்சினன் செருப்படியில் அகப்பட்டது போல.

தேடாது அழிக்கின் பாடாய் முடியும். 13210


தேடாது அழித்த தேவடியாள் தேவடியாள்.

தேடி அழைத்த விருந்துக்கு வாடி இருந்ததுபோல.

தேடி எடுத்துமோ திருவாழி மோதிரத்தை.

தேடித் திருவிளக்கு வை.

தேடித் தின்றவர் தெய்வத்தோடு ஒத்தவர். 13215


தேடிப் பிடித்தாள் தேவடியாள் கள்ளனை.

தேடிப் புதைத்துத் தெருவில் இருக்கிறதா?

தேடிப் போகாதே; கூறி விற்காதே.

தேடிப் போனது அகப்பட்டது போல.

தேடிப் போன தெய்வம் எதிரே வந்தது போல. 13220


தேடிப் போன மருந்துக் கொடி காலில் அகப்பட்டது போல.

தேடியதை எல்லாம் கொடுத்துத் தேட்டு மீன் வாங்கித் தின்னு.

தேடின பூண்டு காலிலே மிதிபட்டது போல.

(பூடு)

தேடின பொருள் காலிலே தட்டினது போல.

தேடுவார் அற்ற பிணம் தெருவோடே. 13225

(பணம்.)


தேய்ந்த அம்மாள் தெய்வயானை, தெய்வத்துக்கு இட்டாலும் ஏறாது.

தேய்ந்த கட்டை மணம் நாறும்.

(தேய்த்த.)

தேய்ந்தாய், மாய்ந்தாய் கொம்பும் கறுத்தாய், தும்பிக்கையும் உள்ளே இழுத்துக் கொண்டாயா?

தேய்ந்தாலும் சந்தனக் கட்டை மணம் போகாது.

(மாறாது.)

தேய்ந்து மாய்ந்து போகிறான். 13230


தேய்ந்து மூஞ்சூறாய்ப் போகிறது.

தேயத் தேய மணக்கும் சந்தனக் கட்டை.

தேர் இருக்கிற மட்டும் சிங்காரம்; தேர் போன பிறகு என்ன?

தேர் ஓடித் தன் நிலையில் நிற்கும்.

(ஓடினாலும்.)

தேர் ஓடி நிலைக்குத்தான் வரவேணும். 13235