102
தமிழ்ப் பழமொழிகள்
மோகத்துக்கு அவன் பார்த்து இட்டதே பிஷை
மோகம் முப்பது நாள்: ஆசை அறுபது நாள்.
மோகனக்கல் ஆனாலும் பளு ஏறினால் உடையாதா? 19265
மோசம் செய்வோன் நாசம் அடைவான்.
மோசம் நாசம் கம்பளி வேஷம்.
மோசம் பாய் போட்டுத் தூங்குகிறது.
மோட்டை போனால் கோட்டை போகும்.
மோடு போயும் முண்டைக்குப் புத்தி வரவில்லை. 19270
மோதிரப் பணத்துக்கு முத்தண்ணா.
மோந்த பூவைச் சூடார்; சூடிய பூவை மோவார்.
மோந்தாற் போல முகத்தைக் கடிக்கிறது.
மோப்பம் அறியா நாயும் ஏப்பம் இல்லா விருந்தும் பயன் இல்லை,
மோப்பம் பிடித்த நாயும் தூக்கம் கெட்ட நாயும் சும்மா இரா, 19275
மோரிக்கடன் முகட்டைத் தொடும்,
மோர் சுடுகிறது என்று ஊதிக் குடிக்கிறது போல.
மோர் மோரோடே, நீர் நீரோடே.
மோர் விற்ற காசு மூன்று நாள் வரும். 19280
மோருக்குப் போகிறவருக்கு முட்டி பிறகாலேயோ?
மோருக்குப் போய் மொந்தையை ஒளிப்பானேன்?
மோருககும் முலைப்பாலுக்கும் தோஷம் இல்லை.
மோரைத் தெளித்தாலும் கல்யாணந்தான்; மூத்திரத்தைத்
தெளித்தாலும் கல்யாணந்தான்.
மோரோ என்பவன் கழுத்தில் லிங்கம் கட்டினது போல. 19285
மோனம் என்பது ஞான வரம்பு,
மோனம் ஞானம்,
மோகடித்துக்கு அவன் பார்த்து இட்டிதே பிஷை