பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

113




வகை தொகை இல்லாத பேச்சும் புகையிலை இல்லாத பாக்கும்

வழவழா கொழ கொழா.

வகை மடிப்பிலே மாட்டிக் கொண்டது.

வங்கணக்காரன் புளுகு வாசற்படி மட்டும்.

வங்கத்துக்கு நிகர் வங்கம்; தங்கத்துக்கு நிகர் தங்கம்.

வங்கம் இறுகினால் மகாராஜன் ஆகலாம். 19440


வங்கம் கட்டினால் தங்கம்.

வங்கம் குத்தத் தங்கம் தேயுமா?

வங்கம் கெட்டால் பங்கம்.

வங்கம் தின்றால் தங்கம் ஆகும்.

வங்கரை கொங்கரையாய் மாட்டிக் கொள்கிறது. 19445


வங்காயக்காரனுக்கு வாய்க் கொழுப்புச் சீலையால் வழிகிறது.

வங்காளத்து நாய் சிங்காதனம் ஏற, வண்ணாரக் குடி நாய் வெள்ளாவி ஏறிற்றாம்.

வங்காளம் போனாலும் வாய்ச் சொல் ஒரு காசு; ஈழம் போனாலும் துடுப்பு ஒரு

காசு.

வங்காளம் போனாலும் வாரியல் வாரியல்தான்.

(வாரியல்-துடைப்பம்.)

வங்காளம் போனாலும் விளக்குமாறு கால் பணம். 19450


வங்கிசம் வார்த்தைக்கு அஞ்சும்; புழுக்கை உதைக்கு அஞ்சும்.

(புழுக்கை உணவுக்கு அஞ்சும்.)

வங்கு நாயை வெளுத்தாற்போல் வெளுக்கவேண்டும்.

வங்கு பிடித்த நாய் வழியில் நின்றாற் போல.

வங்கை வைத்தால் தன் குடிக்கு அனர்த்தம்.

வச்சத்துக்கு மேலே வழி இல்லை; பிச்சைக்குப் போகச் சுரைக் குடுக்கை இல்லை. 19455


வச்ச நாபியிலே புழுத்த புழு.

வச்ச நாபியை உப்புப் பார்க்கலாமா?

வச்சிரம் அளந்த கையால் வைக்கோல் துரும்பு எடுக்கலாயிற்று.

வசனம் பண்ண உபாயம் காரணம்.

வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்றது போல். 19460


வஞ்சகம் இல்லாமல் வளர்ந்திருக்கிறான்.

வஞ்சகம் நெஞ்சைப் பிளக்கும்.

வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.