பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தமிழ்ப் பழமொழிகள்


வலுவில் வந்தவள் கிழவி.

வலைக்கு முன்னே கல் எறிந்த கதை. 19745


வலைச்சி ஓலைப் பாயில் மூத்திரம் பெய்தாற் போல.

வலையன் பிடித்த மீனுக்கு நுறையன் இட்டதே பேர்.

வலையில் பட்ட மானைப் போல.

(வலையில் சிக்கிய.)

வவ்விடக் கவ்வாயிற்று.

வவ்வுதல் செவ்வியைக் கெடுக்கும். 19750


வழக்கில் விழுந்தவனுக்கும் வழுக்கி விழுந்தவனுக்கும் கை கொடுக்கக் கூடாது.

வழக்குத் தீர்க்கிறதில் மரியாதை ராமன்தான்.

வழலை முடித்தவன் வாதம் முடித்தவன்.

வழவழத்த உறவைக் காட்டிலும் வைரம் பற்றிய பகை நன்று.

வழி ஆச்சுது; காரியம் வெளி ஆச்சுது. 19755

வழியில் போகிற குதிரைக்கு வைக்கோல் புரி கடிவாளம்.

(கண்ட குதிரைக்கு.)

வழியில் போகிற சனியனை விலைக்கு வாங்கினாற் போல.

(வாரத்துக்கு.)

வழியில் போகிறவனை அண்ணே என்றால் உன்னோடு பிறந்தேனா மலமுண்டை என்பானாம்.

வழியில் போகும் நாய்க்கு வாயைப்பார்.

வழியும் இல்லை; வாய்க்காலும் இல்லை. 19760


வழியே ஏகுக; வழியே மீளுக.

வழியேபோய் வழியே வந்தால் அதிகாரி செங்கோல் என்ன செய்யும்?

(செங்கோல் மயிர் மாத்திரம்.)

வழியே வாழ்வு; வழியே சாவு.

வழியோடு போகிறவனுக்கு வீடு கட்டுவது எளிது.

வழி வழியாய்ப் போகும்போது விதி என்ன செய்யும்? 19765


வழி வழியாய்ப் போனாலும் விதி விதியாய் வருகிறது.

வழி வாய்க்கால் இல்லாமல் பேசுகிறாய்.

வழுக்கற் சேற்றிலே நட்ட கம்பம்.

வழுக்கி விழாத குதிரை வளமான குதிரை.

வழுக்கைத் தலையனுக்குச் சீப்பு எதற்கு? 19770