பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தமிழ்ப் பழமொழிகள்


வாங்குகிறது பிச்சை; ஏறுகிறது தந்தப் பல்லக்கு.

வாங்குகிறதைப் போல் இருக்க வேண்டும், கொடுக்கிறதும்.

வாங்குகிறபோது ஒரு பிள்ளை பெற்றது போல; கொடுக்கிற போது ஒரு பிள்ளை செத்தது போல.

வாசம் அறிந்தது வேட்டை நாய்; சுவாசம் முறிந்தது காட்டு மான்,

வாசல்படி இட்டு விடிகிறதோ, மகாதேவர் இட்டு விடிகிறதோ? 19835


வாசல்படி தலையில் பட்ட பிறகா குனிகிறது?

வாசலில் கட்டித் தாழ்வாரத்தில் அறுத்தது போல,

வாசலைக் காக்கிறான்.

வாசனை அற்ற புஷ்பம் வனத்தில் இருந்து என்ன பயன்?


வாசி விட்டால் யோகம் போச்சு. 19840

வாடிய பூவைச் சூடினாலும் சூடிய பூவைச் சூடக் கூடாது.

வாடி வலித்துத் திரங்கிக் கிடந்திடினும் புலித்தலையை நாய் மோத்தல் இல்.

வாணலிக்குத் தப்பி அடுப்பில் குதித்தது போல.

வாணிகம் செய்யின் காணியும்குறி.

(வாணியம் )

வாணியக் கட்டை வைரக் கட்டை; தேயத் தேயத் துடைப்பக் கட்டை. 19845


(வாணியன் கட்டை.)

வாணியர்கள் ஆடும் செக்கை வளைய வரும் எருதுகள் போல.

வாணியன் ஆசை கோணியும் கொள்ளாது.

வாணியன் கையில் மண்ணும் குயவன் கையில் எண்ணெயும் கொடுத்தது போல.

வாணியனுக்கு ஒரு காலம்; சேணியனுக்கு ஒரு காலம்.

வாணியனுக்குக் கொடாதவன் வைத்தியனுக்குக் கொடுப்பான். 19850


வாணியனோடும் வழக்கு; சேணியனோடும் வழக்கு,

வாத்திமச் செட்டு.

வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்.

வாத்தியார் சம்சாரம் மூத்தாள் பதிவிரதை.

வாத்தியார் சொன்னது தர்ப்பயாமி. 19855


வாத்தியார் பிள்ளை மண்டு; வைத்தியன் பிள்ளை நோயாளி

(மகன் வாத்தியார் பிள்ளை முண்டம். முட்டாள்.)