பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

137


வாராத வாழ்வு வந்தாலும் வடக்கில் தலை வைக்காதே.

வாரிக் கொடுக்கும் வள்ளல் கை.

வாரியல் கட்டைக்குப் பட்டுக் குஞ்சமா?

(வாரியல் கொண்டைக்கு.)

வாரியல் கட்டை வைரக் கட்டை; தேயத் தேயத் துடைப்பக்கட்டை.

வாரைக் கடித்துத் தோலைக் கடித்துத்தானே வேட்டை நாய் ஆகவேண்டும்? 20015


வால் இல்லாத குரங்குக்கு வாய் எல்லாம் பல்.

வால் இல்லாத குரங்கு போல.

வால் இல்லாத நாய்க்கு மனத்திலே சந்தோஷம்.

வால் இழந்த நரி போல.

வால் ஒன்றுதான் இல்லை. 20020


வால் நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடம் ஆனால் கால் நடையாய்ப் போனவர்கள் கனக தண்டி ஏறுவரே.

வால் பிராணன் தலைக்கு வந்தது.

வால் போச்சு, கத்தி வந்தது. டம்டம்டம்.

வால் போனாலும் போகிறது; எனக்குத் தோல் வேண்டும்.

வால் வைப்பதற்குள் பொழுது விடிந்து விட்டது. 20025


வால ஜோசியனும் விருத்த வைத்தியனும் நன்று.

வாலிபத்தில் இல்லாத மங்கையை வயசு வந்தபின் என்ன செய்கிறது?

(வாலிபத்தில் கிடைக்காத,)

வாலிபத்தில் தேடாத தேவடியாள் வயசு வந்த பின் தேடப் போகிறாளா?

வாலிபத்தில் முதிர்ந்த புத்தி, குறுகின வயசுக்கு அடையாளம்.

வாலில் கலத்தைக் கட்டினால் மாடு வேளைக்குக் குறுணி கறக்கும். 20030


வாலை ஆட்டாதே.

வாலை ஒட்ட நறுக்கி விடுவேன்.

வாவல் மீனைச் சாப்பிட்டு ஆவலைப் போக்கு

வாழ்க்கை கொடுத்தவன் கையில் வாழ்நாள் அடைக்கலம்

வாழ்ககைப் படுகிறதை நம்பி அவிசாரி ஆகிறதும் கெட்டது. 20035


வாழ்க்கை படுகிற பெண்ணுக்குச் சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா?