பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

139



வாழ்ந்தாளாம் சேஷி; வறுத்தாளாம் வறண்ட ஓட்டை.

வாழ்ந்து கெட்டவன் வடக்கே போ; கெட்டு நொந்தவன் கிழக்கே போ.

வாழ்நாள் உடையான் வலுப்பட்டுச் சாகான் 20060


வாழ்நாளுக்கு ஏற்ற வயிற்றெரிச்சல்.

வாழ்நாளைக் கொடுத்து வாண தீர்த்தம் ஆடு.

வாழ்வதும் கெடுவதும் வாயால்தான்.

வாழ்வாருக்குச் சீதேவி வாயிலே.

வாழ்வாள் பிள்ளையை மண் விளையாட்டிலே தெரியும். 20065

(யாழ்ப்பாண வழக்கு.)


வாழ்வாருக்குச் சீதேவி வாயிலே.

வாழ்வு ஒரு காலம்; தாழ்வு ஒரு காலம்.

வாழ்வும் கேடும் வாயாலே.

வாழ்வும் சில காலம்; தாழ்வும் சில காலம்.

வாழ்வும் தாழ்வும் ஒரு வழி நில்லா. 20070


வாழ்வு வந்து வலக்காலைச் சுற்றுகிறது; வாங்கடா பித்தளை பாடகத்தை.

(வாங்கடி வலக்கைப் படத்தை.)

வாழ்வு வரும்போது மதி ஓடி வரும்.

வாழ்க்கை கொடுத்தவன் கையில் வாழ்நாள் அடைக்கலாம்.

வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ளப்படாது.

வாழத் தெரியாது வாழச் சொன்னால் வாயாலும் கையாலும் வாழச் சொன்னாள். 20075


வாழப் போகிற பெண் சீப்பை எடுத்து ஒளித்த கதை.

வாழ மாட்டாத பெண்டாட்டிக்குக் கைபட்டாலும் குற்றம்; கால் பட்டாலும் குற்றம்.

வாழ வந்த குரங்கு வையகம் புகழைத் தேடிக் கொண்டதாம்.

வாழ வந்தவனுக்கு வழியிலே என்ன சோலி?

வாழ வரம் வாங்கி வந்த பிறகு முடியவில்லை என்றால் யார் விடுவார்? 20080


வாழாக் குமரி மூளா நெருப்பு.

(யாழ்ப்பாண வழக்கு.)

வாழாத நாய் வாழ்ந்த நாயைக் குறை சொல்லும்.