144
தமிழ்ப் பழமொழிகள்
விட்டதடி உன் ஆசை விளாம் பழத்து ஓட்டோடே.
விட்டதே நம் உறவு, வெண்கலத்தில் ஓசை போல.
விட்ட பாம்பும் பட்டுப் போகும். 20175
விட்டில் பூச்சியைப் போல் பறந்த திரிகிறான்.
விட்டில் பூச்சி விளக்கில் விழுவதுபோல.
விட்டு அடித்தால் என்ன? கட்டி அடித்தால் என்ன?
விட்டு அடிக்கிறதிலும் தொட்டு அலை.
விட்டு அறுத்தாலும் ஆகாது என்று ஒட்ட அறுத்திடுவேன். 28180
விட்டுக் கெட்டது காது; விடாமல் கெட்டது கண்.
விட்டுச் சொன்னால் குட்டுக் குலையும்.
விட்டு விட்டாலும் ஒட்டிக் கொண்டு வருகிறான்.
விட்டு விட்டுப் பெய்கிற மழையிலும் விடாமல் பெய்கிற தூவானம் நல்லது.
விட்டு வைத்த கடனும் பெற்று வைத்த பிள்ளையும் எங்கும் போகா 20185
விடக்கே ஆயினும் வடிக்கு ஆகாது.
விடாச் சுரத்துக்கு விஷ்ணுக் கரந்தை.
விடாத மழை பெய்தாலும் படாத பாடு பட வேண்டும்.
விடாத மழையால் இல்லி ஒழுக்கு அடைபடும்.
விடா முன்டனும் கொடாக் கண்டனும். 20190
விடாய் தீரச் கங்க ஸ்நானம் பண்ணிப் பாவம் போகுமாப் போலே.
விடிக்கப் போன இடத்தில் விளாம் பழம் கிடைத்தது போல்.
விடிகிற மட்டும் இறைத்தவனும் சாலை உடைத்தவனும் சரியா?
விடிந்ததும் பெண்ணுக்கு முக்காடோ?
விடிந்தால் தெரியும் மாப்பிள்னை குருடும், பெண் குருடும். 20195
விடிந்தால் தெரியும் வெளிச்சம்.
விடியக் கல்யாணம்; பிடி தாம்பூலம்.
விடிய விடிய இறைக்க, விடித்த பிறகு உடைக்க.
விடிய விடியக் கதை கேட்டுச் சீதைக்கு ராமன் சிற்றப்பன் என்றானாம்.