தமிழ்ப் பழமொழிகள்
147
வித்தை அழிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பத்து.
வித்தை அற்றவன் அழகு, வாசனை இல்லாத முருக்கம்பூப் போல. 20250
வித்தை இல்லாத மாந்தர் விலங்கினும் கடையர்.
வித்தை உள்ளவன் தூங்கமாட்டான்; விசாரம் உள்ளவனும் தூங்க மாட்டான்.
வித்தை உள்ளவன் பெரியவன்.
வித்தைக் கள்ளி மாமியார் விறகொடிக்கப் போனானாம்; கற்றாழை முள் கொத்தோடே தைத்ததாம்.
வித்தைக் கள்ளி, விளையாட்டுக் கள்ளி, பாகற்காய் விற்ற பழங்கள்ளி. 20255
வித்தைக்காரப் பெண்பிள்ளை செத்த பாம்பை ஆட்டுகிறாள்.
வித்தைக்காரன் தவறி விழுந்தால் அதுவும் ஒரு விளையாட்டு.
வித்தைக்காரன் நாய்க்குக் கற்ற வித்தை எல்லாம் தெரியும்.
வித்தைக்குச் சத்துரு விசனம் தரித்திரம்.
வித்தைக் குதிரைக்குப் புல்லா? 20260
வித்தை பதினெட்டும் விழல்.
வித்தையில் எளிது சூனியம்.
பன்னத்திலே எளிது நீற்றுப் பெட்டி.
வித்தையில் வித்தை வகார வித்தை.
வித்தை விரும்பு.
விதி அற்ற நாய்க்கு வில்லி வீரமாம் தாய் வீடு. 20265
விதி அற்ற மாடு கதி வெட்ட புல்லைத் தின்னும்.
விதி அற்றவன் வேட்டகத்துக்குப் போவான்.
விதி உடையவன் கண்ணுக்கு விளக்காய்த் தெரிந்தது.
விதி உள்ள அகமுடையானுக்கு ரதியாக இருப்பாளாம்.
விதி எப்படியோ, மதி அப்படி. 20270
விதி கெட்டவல் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாலும்,
கட்டக் கொடி கிடைக்காது.
விதித்த விதியை விட வேறு நடக்குமா?
விதிப்பயனை வெல்ல முடியுமா?