பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தமிழ்ப் பழமொழிகள்



விதிப்பழத்தை விலை கொடுத்து வாங்குவது போல.

விதி பார்த்து வகுத்த விபத்தை விஷ்ணுவாலும் தடுக்க முடியாது. 20275


விதி போகிற வழியே மதி போகும்.

விதி முடிந்தவனை விரியன் கடிக்கும்.

(முடித்தால்.)

விதியின் பயனே பயன்.

விதியின் வழியே மதி செல்லும்.

விதியை மதியால் தடுக்கலாமா? 20280

(தடுக்கலாம்.)


விதியை மதியால் வெல்லலாம்.

விதியை வெல்லுவார் உண்டோ?

விதிவசம் போல் ஆகும்.

விதி வலிது.

விதி வழி மதி செல்லும். 20285


விதி வழி வந்த நிதி சதி செய்து விடும்.

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?

(போடக்.. காய்க்குமா?)

விதைக்கு ஏற்ற விளைச்சல்.

விதைக்கு விட்டி காய் போல,

விதைக் கூடை எடுக்கையில் பட்டி மாடு தொடர்ந்த கதை. 20290


விதைக் கோட்டையில் எலியை வைத்துக் கட்டலாமா?

விதைத்ததும் குறுணி, கண்டதும் குறுணி.

விதைத்தால் வரகை விதை; சேவித்தால் வடுகனைச் சேவி.

விதைப்பதன் முன் வேலி அடை

விதை முதல் அகப்பட்டாலும் வேளாண்மையை விடாதே. 20295


விதை முந்தியா, மரம் முந்தியா?

விதையின் தன்மைதானே விளைச்சலில் வரும்?

விதையை அடித்தானாம்; விலவிலே, போய்ப் பட்டதாம்,

விதையைக் குற்றித் தின்னு.

விதையை விழுங்கிய கோழி போல். 20300


விந்து விட்டாயோ, நொந்து கெட்டாயோ?

(வெந்து.)