தமிழ்ப் பழமொழிகள்
149
விநயம் இல்லாத வித்தை பயன் இல்லை.
விநாச சாலே விபரீத புத்தி.
விபசாரம் செய்வாரைச் சுட்டாலும் விடமாட்டார்.
விபசாரி என்று விமானம் ஏறினாலும் திருடி என்று தெரு வழிப்போக முடியுமா? 20305
வியாச்சியம் சேற்றில் நட்ட கம்பம்.
வியாதிக்குப் பத்தியம்: வேதாந்தத்துக்கு வைராக்கியம்.
வியாதிக்கு மருந்து உண்டு; விதிக்கு மருந்து உண்டா?
வியாதியிலும் மருந்து கொடியது.
வியாழன் கூடினால் விவாகம் கூடும். 20310
வியாழன் தெற்கே சூலம்.
விரகன் கோசம் கட்டை தட்டிப் போம்.
விரதத்திலும் பெரிதோ ஒரு சந்தி?
விரதம் கெட்டாலும் சுகம் தக்க வேண்டும்; சுகம் கெட்டாலும் விரதம் தக்க வேண்டும்.
விரல் உதவி விருந்தினர் உதவார். 20315
விரல் உரல் ஆனால் உரல் உத்தரம் ஆகாதா?
விரல் கண்ணிலே குத்தினது என்று வெட்டி விடுவார்களா?
விரல் சுற்றின் மேல் அம்மி விழுந்ததுபோல்.
விரல் நக்கி மோர் குடிப்பது போல.
விரல் நுழைய இடம் உண்டானால் தலையைப் புக விடலாம். 20320
<poem>விரல் நுழைய இடம் கொடுத்தால் கூரலை நுழைக்கிறான்.
விரல் போகாத இடத்தில் உரல் போகுமா?
விரலுக்குத் தகுந்த வீக்கம்.
விரலுக்குமேல் நீணடால் வெட்டி விடவேண்டும் என்கிறாயே!
விரலூண்டு இடம் கொடுத்தால் வீடு எல்லாம் கைக் கொள்கிறதா? 20825
விரலைக் காட்டி உரலை விழுங்குவான். விரித்த ஜமக்காளம். விடியும் மட்டும் கச்சேரி.