பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

151


வில் இல்லாதவன் அம்பு தேடுவானேன்?
வில்லங்கத்தை விலைக்கு வாங்கினாற் போல.
வில்லுக்குச் சேரன்; சொல்லுக்குக் கீரன்,
வில்லுக்கு விஜயன்; சொல்லுக்கு அரிச்சந்திரன்.
வில்லுக்கு விஜயன்; சொல்லுக்குக் கீரன்.

20360

வில்லுக்கு விஜயன்; பரிக்கு நகுலன்.
வில்லுக் குனியாது எய்தால் விலகாது எதிரிபடை.
(எதிர்த்த பகை.)
வில்லும் விளாங்காயுமாக இருக்கிறது,
வில்வப் பழம் தின்பார் பித்தம் போக; பனம்பழம் தின்பார்
பசி போக.
வில்வம் பித்தம் தீர்க்கும்; பனை பசி தீர்க்கும்,

20365

வில் வளைந்தால் மோசம் தரும்.
வில் வளைவதும் பெரியோர்கள் பணிவதும் நல்லதற்கு
அடையாளம் அல்ல.
விலக்கக் கூடாத துன்பத்துக்கு விசனப்படாதே. விலங்கும் பறவையும் விதித்த கோடு கடவா,
(தவறா,)
விலங்கு வேண்டாம்; குட்டையில் மாட்டு என்றது போல,

20370

விலங்கு வேண்டாம்; தொழுவில் இருக்கிறேன்,
விலங்கை விட்டுத் தொழுவில் மாட்டிக் கொண்டது போல.
விலா இறச் சிரிப்பார்கள்.
விலாங்கு மீன் வழுக்கி ஓடுவது போல.
விலைக்குக் கொண்டு விருதுக்கு வேட்டை ஆடுகிறது.

20375

விலைமகட்கு அழகு மேனி மினுக்குதல்.
விலை மோரில் வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக்
கல்யாணம் பண்ணுவான்,
(தலைமகனுக்கு )
விலை மோரில வெண்ணெய் எடுப்பது.
(வெண்ணெய் எடுத்தாளாம்.)
விவேகத்தில் மேன்மை அவிவேகத்தை ஒழித்தல்,
விழக்குழி பாய்ச்சுகிறது.

20380

விழலுக்கு இறைத்த நீர் போல.
விழலுக்கு முத்துலை போட்டு இறைத்தேன்.
விழிக்கு விழி பாய்ச்சுகிறது.