பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தமிழ்ப் பழமொழிகள்



விழித்த முகம் நல்ல முகம்.

விழித்தவன் கன்று நாகு கன்று; தூங்கினவன் கன்று கடாக்கன்று. 20385


விழித்து இருக்க விழியைத் தோண்டினாற் போல.

விழியில் குத்தின விரலை அறுப்பார் உண்டோ?

விழுகிற சுவரில் கை வைத்தாற் போல.

விழுகிற பிள்ளைக்கு அரிவாள்மணையை அண்டல் கொடுத்தாற் போல.

(அண்டை கொடுப்பதா.)

விழுங்கின இரகசியம் வயிற்றில் இராது. 20390


விழுந்த இடம் சுடுகாடு.

விழுந்த இடம் பொழுது; விட்ட இடம் விடுதி.

விழுந்தது பாம்பு; கடித்தது மாங்கொட்டை.

விழுந்த பிள்ளையை எடுக்க நேரம் இல்லை.

(சவிட்ட)

விழுந்தவன் எழுந்திருந்தால் வெட்கத்துக்கு அஞ்சிச் சிரிப்பான். 20395


விழுந்தவன் சிரித்தான் வெட்கத்துக்கு அஞ்சி.

விழுந்தாரைச் சிரியாத வெந்துக்களும் இல்லை.

(பந்துக்களும், யாழ்ப்பாண வழக்கு.)

விழுந்தால் சிரிப்பார்; வேடிக்கை பார்ப்பார்.

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறான்.

விழுந்து உடுத்தால் அழுக்குத் தெரியும். 20400


விழுந்தும் கரணம் போட்டேன் என்ற கதை.

விழுந்து விழுந்து சம்பாதிக்கிறான்.

விழுந்து விழுந்து புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்.

விள்ளாதது குறையாது; இல்லாதது வராது.

விளக்கில் கொளுத்தின பந்தம் போல. 20405


விளக்கில் விழும் விட்டிற் பூச்சி போல.

(விளக்கில் மொய்த்த விட்டிற் பறவை போல.)

விளக்கு இருக்க நெருப்புக்கு அலைவானேன்?

விளக்கு இருக்க மின்மினித் தீக் காய்ந்தவாறே.

(தேவாரம்.)

விளக்கு இல்லாத வீட்டில் பேய் குடி இருக்கும்.

(குடி புகும்.)

விளக்கு ஏற்றிக் கூடையால் மறைக்கிறது.