154
தமிழ்ப் பழமொழிகள்
விளைகிற போதே சோணலாய் விளைந்தால் விறகு விராட்டி என்னத்துக்கு?
விளைந்த கதிர் வணங்கும்.
விளைந்த காட்டுக்குப் பறந்த குருவியாக இருக்கிறான்.
விளைந்ததும் விளையாததும் வைக்கோலைப் பார்த்தால் தெரியும். 20435
விளைந்த நெல் கால்மாட்டில் விழுந்தாற் போல.
விளைச்சே சோறாய் விளைந்தால் விறகு விராட்டி எதற்கு?
விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
விளையாட்டுச் சண்டை வினைச் சண்டை ஆகும்.
விளையாட்டுப் பண்டம் வீடு வந்து சேராது. 20440
விளையாட்டுப் பிள்ளைக்கு மண்மேல் ஆசை.
விளையாட்டுப் பிள்ளைக்கு விதரணை தெரியாது.
விளையாட்டுப் பிள்ளைகள் விட்ட வெள்ளாமையைப் போல்.
விளையாட்டுப் பிள்ளை விஷத்துக்கு அஞ்சாது.
விளையாட்டுப் பூசல் வினைப் பூசல். 20445
விளையாட்டே வினை ஆகும்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
விளைவது அரிசி ஆனாலும் மேல் உமி போனால் விளையாது.
விளைவது ஆகிலும் அளவு அறிந்து அழி.
விற்ற குண்டைக்குப் புல் போடுவானேன்? 20450
விற்ற பசுவுக்குப் பச்சைப் புல் போடுவார் உண்டோ?
விற்ற மாட்டுக்கு விலை இல்லை.
விறகுகட்டுக்காரனுக்குத் தலைவலி வந்தால் விறகிலே ஓரடி அடித்தால் போய்விடும்.
விறகுகட்டுக்காரனுக்கு நாரை வலமானால் ஒரு பணம் விற்கிறது
ஒன்றே கால் பணம் விற்கும்.
விறகு கட்டுக்காரனுக்குப் பிளவை புறப்பட்டால் விறகுக் கட்டையால் ஓர் அடி. 20455
விறகு கோணலானால் நெருப்புப் பற்ற தா?
விறகுதலையனுக்குக் கால் பிளவை வந்தால் விறகு கட்டையால் ஓங்கி ஓர் அடி அடிப்பான்.