பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

157



வீட்டுக்காரி என்பது பெண்சாதிக்குப் பெயர்.

வீட்டுக்காரிக்கும் போட்டிக்காரி.

வீட்டுக் காரியம் பாராதவன் நாட்டுக் காரியம் பார்ப்பானா?

வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊரார் அடிக்கி விடுவார்கள்.

(அடங்காததை ஊர் அடக்கும்.)

வீட்டுக்கு அலங்காரம் பெரிய குடி. 20510


வீட்டுக்கு அலங்காரம் மனையாள்.

வீட்டுக்கு அலங்காரம் விளக்கு.

வீட்டுக்கு அலங்கானம் வேளாண்மை.

வீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி; வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கல் பெண்டாட்டி.

(வெறும்பயல் பெண்டாட்டி.)

வீட்டுக்கு உள்ளே வேட்டை நாயை உசுப்புவானேன்? 20515


வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்.

வீட்டுக்கு ஒரு மொத்தை; கேட்டுக் கொள்ளடி மாரியாத்தை.

(மாரியாத்தா. பாரதம் படிக்கிறவருக்கு.)

வீட்டுக்கு ஒரு வாசற்படி; பூட்டுக்கு ஒரு திறவு கோல்.

வீட்டுக்குக் கேடும் சோற்றுக்கு நாசமும்.

வீட்டுக்குச் சோறு இல்லை; சிவன் அறிவான்; நாட்டுக்குச் செல்லப் பிள்ளை நான் அல்லவா? 20520


வீட்டுக்குப் புகழ்ச்சியோ, நாட்டுக்குப் புகழ்ச்சியோ?

வீட்டுக்குப் புளி, காட்டுக்குப் புலி.

வீட்டுக்கு முன்னே பட்டைக் கட்டி, மாட்டுக்குப் பின்னால் வைக்கோல் போட்டது போல்,

(பிட்டத்துக்கு முன்னே..)

வீட்டுக் குருவியை காட்டில் காட்டுக் குருவியைப் பிடி

வீட்டுக்கு வாய்த்தது எருமை; மேட்டுக்கு வாய்த்தது போர். 20526


வீட்டுக்கு விளக்கு வேண்டாம்

வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.

வீட்டுக்கு வீடு கண் அடுப்பே தவிரப் பொன் அடுப்பு இல்லை.

வீட்டுக்கு வீடு வாசற்படி ஒன்றுதான்

வீட்டுக்கு வீரன்; காட்டுக்குக் கள்ளன். 20530


வீட்டுக்குள் கஞ்சித் தண்ணீரைக் குடித்துவிட்டு மீசையில் வெண்ணெயைத் தடவிக் கொண்டு புறப்படுகிறது.