160
தமிழ்ப் பழமொழிகள்
வீண் ஆன வீணனுக்கு வாழ்நாளை மாய்ப்பானேன்.
வீண் இழவாம், வெங்காயத் தோலாம்; பிடுங்கப் பிடுங்கப் பேரிழவாம்.
வீண் இழவுக்கு மார் அடிக்கிறதா?
வீண் இழவுக்கு வீட்டைக் கட்டிப் பார இழவுக்குப் பந்தல் போடு.
வீண் கட்டை என்றாலும் ஆண் கட்டை அல்லவோ? 20590
வீண் பழி ஏன் ஏற்றுக் கொள்கிறாய்?
வீண் விபரீதத்தால் பேதையர் வீண் செலவு செய்ய உடன்படுவார்கள்
வீணருக்குச் செய்தது எல்லாம் வீண் ஆம்.
வீணருக்கும் கீர்த்திக்கும் மெத்தவும் தூரம்.
வீணன் கருமம் இழந்தான். 20595
வீணாய் உடைந்த சட்டி வேணதுண்டு என் தலையில்; இந்தப் பூணாராம் பூண்ட புதுமைதனைக் கண்டதில்லை.
வீணாய் வீணாய் என்பதை ராமா ராமா என்றேன்.
வீணாலே என் உழைக்கிறாய்?
வீணாரவாரம் இழவி திரண்டதும் பாட்டுக்கு வழி இல்லாமல் பிணங்கி அழுததும்.
வீணான சொல்லுக்கு வாயால் கெட்டேன். 20600
வீணுக்கு உழைக்கிறவன் வீணன்.
வீணுக்குக் தாலி கட்டி வேணுமென்று அறுத்தேனா?
வீணை கோணினாலும் நாதம் கோணுமா?
வீதிச் சண்டையை விலைக்கு வாங்குவது போல.
வீதியும் பெண்ணும் விலை போச்சது கை தப்பினால். 20605
வீம்புக்காரனுக்கு மேல் தெரியுமா?
வீம்புக்குப் புளியங்காய் தின்றாற் போல.
வீம்புக் குப்பையில் வீண் செடி.
வீம்புக்கு வேட்டை ஆடாதே.
வீம்புக்கு வேஷம் கொள்ளாதே. 20610