பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

165


வெண்கலம் சஞ்சலம்.

வெண்கலம் நடமாடக் குயவன் குடி போகிறான்.

வெண்கலம் என்றால் ஓட்டை ஓட்டை என்கிறான்.

வெண்டலைக் கருடன் சென்று இடமானால் எவரி கையிற் பொருளும் தன் கையிற் சேரும்.

(வந்து இடமானால்.)

வெண்ணீறு வினை அறுக்கும். 20700


வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன்?

வெண்ணெய் உருகுமுன் பெண்ணை பெருகும்.

வெண்ணெய்க் கட்டியும் சீனியும் ஊட்டலாம்; விக்கிக் கொள்வதற்கு என் செய்யலாம்.

வெண்ணெய்க் கட்டியும் முப்பாலும் போடுவார்; விக்கிக் கொள்வதற்கு என் செய்வார்?

வெண்ணெய்க்குப் பல் முளைத்தாற் போல். 20705


வெண்ணெய் திரளும் போது தாழி உடைந்த மாதிரி.

(திரண்டு வரும் போது.)

வெண்ணெய் தின்றது ஒருவன்; விரல் சூப்பினது ஒருவன்.

(ஒருத்தி...ஒருத்தி)

வெண்ணெய்போல உழுதால் குன்று போல விளையும்.

வெண்ணெய் வெட்டி சிப்பாய்.

வெண்ணெய் வைத்துக் கொக்குப் பிடிப்பதா? 20710


வெண்ணெயும் சீனியும் விரசி ஊட்டலாம்; விக்கிக் கொள்வதற்கு என்ன செய்யலாம்?

வெண்ணைய் தின்று சாம்பலைப் பூசிக் கொள்வது போல்.

வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அழலாமா?

வெண்தலைக் கருடன் வந்து இடமானால் எவர் கைப்பெருளும் தன் கைப்பொருள் ஆகும்.

வெதும்பின பயிருக்கு மேகம் பெய்தாற் போல. 20715

(மழை பெய்தாற் போல்.)


வெதுவெது என்று தண்ணீர் குடிக்காதவனா உடன்கட்டை ஏறப் போகிறான்?

வெந்த சோற்றைத் தின்று வாய்க்கு வந்தது எல்லாம் பிதற்றுகிறான்.

வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகிறது.

வெந்தது போதும்; முந்தியிலே கட்டு.

வெந்ததைத் தின்று வந்ததை உளறுகிறது. 20720