தமிழ்ப் பழமொழிகள்
167
வெல்லப் பிள்ளையாருக்கு வெல்லமே நைவேத்தியம்.
வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அதற்கே நைவேத்தியம் செய்கிறது.
வெல்லப் பேச்சுச் சொல்லுக்கு அசையாது. 20750
வெல்லப் போனான் ஒரு செல்லப் பிள்ளை; மெல்லப் போகிறான் ஓர்
அமுங்குத் தலைவன்.
வெல்லம் உள்ள வாயைச் சளுப்பென்று நக்குகிறான்.
வெல்லம் என்கிற வாய் தித்திக்குமா?
வெல்லம் சர்க்கரை சொல்லப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா.
வெல்லம் தின்கிறவன் ஒருவன் விரலைச் சூப்புகிறவன் வேறு ஒருவன். 20755
வெல்லம் பெருத்தது வேலூர்.
வெல்லமும் போச்சு; வெல்லம் கட்டிய துணியும் போச்சு.
வெல்ல வார்த்தையால் சொல்லுகிறதா?
வெல்லாது உங்கள் படை செல்லாது பாண்டியன் முன்.
வெள்ளத்து இடைப்பட்ட நரியினம் போல். 20760
வெள்ளத்தில் போனாலும் ஓடக்காரனுக்குக் காசு கொடேன்
என்ற கதை.
வெள்ளத்தோடு போனாலும் ஓடக்காரனுக்கு அரைக்காசு கொடுக்க மாட்டான்.
வெள்ளம் கண்ட வானம் பெய்யும்.
வெள்ளம் பள்ளத்தை நாடும்; விதி புத்தியை நாடும்.
வெள்ளம் பாயும் கடலில் வாய்க்காலும் பாயும். 20765
வெள்ளம் வருகிறதற்கு முன்னே அணை போட வேண்டும்.
வெள்ளம் வரும்முன்னே அணை கோலிக் கொள்ள வேண்டும்.
வெள்ளம் வந்தபின் அணை போடலாமா?
வெள்ளமே போனாலும் பளளம் பார்த்துப் பயிர் இடு.
வெள்ளரிக் காய்க்கு விதை ருசி, கத்திரிக் காய்க்குக் காம்பு ருசி. 20770
வெள்ளரிக்காய்க் கூடை வெங்கூடை, பாகற்காய்க் கூடை
பணக் கூடை.
வெள்ளரிக்காய் விற்ற பட்டணம்.
வெள்ளரித் தோட்டத்தில் புகுந்த குரங்கு போல.