பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தமிழ்ப் பழமொழிகள்


வெள்ளைப் பூண்டு எத்தனை வாசனை காட்டினாலும் துர்க் கந்தத்தையே வீசும்.

வெள்ளையப்பன் இருந்தால் எல்லாம் செய்யலாம்.

(வெள்ளையப்பன்-பணம்.)

வெள்ளையாய்ச் சொல்லிவிட்டான். 20825


வெள்ளையும் சள்ளையுமாய் வந்தான்; வீட்டுக்குச் சோற்றுக்கு இல்லை.

(சொள்ளையுமாய் வீட்டிலே சோறு இல்லை.)

வெள்ளையும் சொள்ளையும்.

வெள்ளை வண்ணாத்திப் பூச்சி மிச்சமானால் வெள்ளம் ஜாஸ்தி.

வெள்ளை வேட்டி வீராசாமிக்கு வேலூரிலே பெண்ணாம்.

வெளிச்சம் இருள் ஆனால் இருள் என்ன ஆகும்?

வெளிச்சம் புகாத வீட்டில் வைத்தியன் புகுவான். 20830


வெளிச்சீர் உட்சீரைக் காட்டும் கண்ணாடி.

வெளிமழை விட்டாலும் செடிமழை விடாது.

வெளியில் ஒழுங்கு; உல்ளே ஓக்காளம்.

வெளியில் சொன்னால் வெட்கக் கேடு.

வெளியில் சொன்னால் வெட்கம்; சொல்லாவிட்டால் துக்கம். 20835


வெளியில் தளுக்கு; உள்ளே அழுக்கு.

வெளியில் பார்த்தால் டம்பம்; உள்ளே பார்த்தால் ஓக்காளம்.

வெளுத்தது எல்லாம் பால் ஆகுமா? கறுத்தது எல்லாம் தண்ணீர் ஆகுமா?

வெருத்த நாரை வலமானால் விற்பதற்கு இரட்டை விலை.

(இரட்டி)

வெளுத்து விட்டாலும் சரி; சும்மா விட்டாலும் சரி; 20840


வெளுப்பானுக்கு வெளுப்பான் சாதி வண்ணான்.

வெளு வெளு என்று வெளுத்து விட்டான்.

வெற்றி பெற்றவன் சுத்த வீரன்.

வெற்றியும் தோல்வியும் வீரனுக்குச் சமம்.

வெற்றிலைக்குத் தண்ணீரும் வேசிக்கு மஞ்சளும் போல. 20845


வெற்றிலைக் கொடி விசாகக் கார்ததிகையில் விசிறிப் போட்டாலும் செழிக்கும்.