பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பழமொழிகள்

179


வேலி நிழலும் நிழல் அல்ல; ஆண் உறவும் உதவு அல்ல.

வேலிப் புறத்தில் கண்ணும் மாமியார் தலையில் கையும்.

வேலியிலே சீலையைப் போட்டால் மெள்ளத்தான் எடுக்க வேணும்.

வேலியே மேய்ந்தால் விளைவது எப்படி?

(விளையுமாறு எப்படி.)

வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி? 21050


வேலியே வயலை அழித்தால் விளைகிறது எங்கே?

வேலிலும் நாலு பலன் உண்டு.

வேலி வைத்துக் காப்பாற்றாத கன்றும் ஆலை வைத்து ஆடாத வாணியனும் சரி அல்ல.

(வீண்.)

வேலுக்குப் பல் உறுதி, வேம்புக்குப் பல் ஒளி.

வேலும் வாளும் அடலுக்கு உறுதி. 21055


வேலை அதிகம், சம்பளம் கொஞ்சம்.

வேலை அற்ற அம்பட்டன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம்.

வேலை அற்ற அம்பட்டன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம்

வேலை அற்ற அம்பட்டின் மகளைப் பிடித்துச் சிரைத்தானாம்.

வேலை அற்ற கோழி வெறுமனே முட்டை இட்டதாம். 21060


வேலை அற்ற தட்டான் ஊது குழலை உடைத்தானாம்.

வேலை அற்ற நாய்க்கு வேறு வேலை என்ன?

வேலை அற்ற மாமியார் கழுதையைப் போட்டுச் சிரைத்தாளாம்.

வேலை அற்ற மாமியார் மருமகளைப் போட்டுத் தாலாட்டினாள்.

வேலை அற்றவன் ஓலையை ஏற்று பிரிந்து கொட்டுண்டால் திருப்பி ஏற்று. 21065

(யாழ்ப்பாண வழக்கு.)


வேலை அற்றனன் வேளாளத் தெருவுக்குப் போ; அலுவல் அற்றவன் அக்கிரகாரத்துக்குப் போ.

வேலை இல்லா ஊருக்கு ராஜா ஏன்? பாம்பு இல்லா ஊருக்குக் கீரிப் பிள்ளை ஏன்?

வேலை இல்லாத் தலை வீண் எண்ணக் கலை.

வேலை இல்லாத அம்பட்டன் ஆட்டைச் சிரைத்தானாம்.

வேலை இல்லாதவன் சீலைப் பேன் குத்தினாற் போல். 21070


வேலை இல்லாதவன் வேளாளத் தெருவுக்குப் போனாற் போல.

வேலை இல்லாதவனுக்குச் சாப்பாடு எதற்கு? எச்சில் சோற்றுக்காரனுக்கு டம்பம் எதற்கு?