தமிழ்ப் பழமொழிகள்
179
வேலி நிழலும் நிழல் அல்ல; ஆண் உறவும் உதவு அல்ல.
வேலிப் புறத்தில் கண்ணும் மாமியார் தலையில் கையும்.
வேலியிலே சீலையைப் போட்டால் மெள்ளத்தான் எடுக்க வேணும்.
வேலியே மேய்ந்தால் விளைவது எப்படி?
வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி? 21050
வேலியே வயலை அழித்தால் விளைகிறது எங்கே?
வேலிலும் நாலு பலன் உண்டு.
வேலி வைத்துக் காப்பாற்றாத கன்றும் ஆலை வைத்து ஆடாத வாணியனும் சரி அல்ல.
வேலுக்குப் பல் உறுதி, வேம்புக்குப் பல் ஒளி.
வேலும் வாளும் அடலுக்கு உறுதி. 21055
வேலை அதிகம், சம்பளம் கொஞ்சம்.
வேலை அற்ற அம்பட்டன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம்.
வேலை அற்ற அம்பட்டன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம்
வேலை அற்ற அம்பட்டின் மகளைப் பிடித்துச் சிரைத்தானாம்.
வேலை அற்ற கோழி வெறுமனே முட்டை இட்டதாம். 21060
வேலை அற்ற தட்டான் ஊது குழலை உடைத்தானாம்.
வேலை அற்ற நாய்க்கு வேறு வேலை என்ன?
வேலை அற்ற மாமியார் கழுதையைப் போட்டுச் சிரைத்தாளாம்.
வேலை அற்ற மாமியார் மருமகளைப் போட்டுத் தாலாட்டினாள்.
வேலை அற்றவன் ஓலையை ஏற்று பிரிந்து கொட்டுண்டால் திருப்பி ஏற்று. 21065
வேலை அற்றனன் வேளாளத் தெருவுக்குப் போ; அலுவல் அற்றவன் அக்கிரகாரத்துக்குப் போ.
வேலை இல்லா ஊருக்கு ராஜா ஏன்? பாம்பு இல்லா ஊருக்குக் கீரிப் பிள்ளை ஏன்?
வேலை இல்லாத் தலை வீண் எண்ணக் கலை.
வேலை இல்லாத அம்பட்டன் ஆட்டைச் சிரைத்தானாம்.
வேலை இல்லாதவன் சீலைப் பேன் குத்தினாற் போல். 21070
வேலை இல்லாதவன் வேளாளத் தெருவுக்குப் போனாற் போல.
வேலை இல்லாதவனுக்குச் சாப்பாடு எதற்கு? எச்சில் சோற்றுக்காரனுக்கு டம்பம் எதற்கு?