இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
182
தமிழ்ப் பழமொழிகள்
வேளையோ அவவேளை, வீட்டிலோ அன்னம் இல்லை.
(அவல வேளை.)
வேற்றும் அரிசி விறகு கரி உண்டானால் சாற்றூருக்கு இல்லை சரி.
வேற்றூர் அரிசியும் விறகும் உண்டானால்
சாத்தூருக்கு ஒப்பு இல்வல.
வேறு வினை தேவை இல்லை; வினை தீர்த்தான் கோவிலுக்குப் போகவேண்டியதில்லை. 21125
வேணலுக்குக் கன மழை வரும்; வேந்தனுக்குக் கன ஜனம் சேரும்.
(வேனிலுக்கு.)
வேனில் காலத்துக்கு விசிறி; ஆன காலத்துக்கு ஆச்சாவும் தேக்கும் வை.
வேஷத்தினால் என்ன, வெண்ணீற்றினால் என்ன?