184
தமிழ்ப் பழமொழிகள்
வைக்கோல் படப்பின்மேல் நாய் படுத்தமாதிரி.
வைக்கோல் படப்புப் போல மெலிந்து போனாயே!
வைக்கோல் படப்பை நாய் காத்தாற் போல். 21150
வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதுபோல.
வைக்கோல் போரில் நின்று மேயும் காளைக்குப் பிடுங்கிப் போட்டால் கட்டுமா?
வைக்கோலில் விளைந்ததை வைக்கோலில் கட்ட வேண்டும்.
வைகறையில் எழுந்து வயலுக்குப் போ.
வைகறைத் துயில் எழு. 21155
வைகாசி எள்ளு வாயிலே.
வைகாசி எள்ளை வரப்பிலே கொட்டு.
வைகாசி மழை பெய்தால் புளியம்பூப் பொய்க்காது.
வைகாசி மழை வாழை பெருகும்.
வைகாசி மாதத்தில் வரகு விதைத்தால் கையாடல் கலம் காணும். 21160
வைகாசி மாதம் ஆற்றில் தண்ணீர்.
வைகாசி மாதம் மதி குறைந்த நாலாம் நாள் பெய்யுமே யாகில் பெருமழையாம்; பெய்யாக்கல் மாரி மறுத்து மறி கடலும் நீர் வற்றி ஏரிக்குள் என் விதை.
வைகாசி மாதம் வறுத்துக் குத்த வேணும்.
வைகாசி மாதம் வாய்திறந்த கோடை.
வைகாசி மாதம் வாய் மடையில் ஏர் பூட்டப் பொய்யாமல் பூக்கும் புளி. 21165
வைகாசி மாதம் வாழை பெருகும்.
வைகுண்டத்துக்குப் போகிறவனுக்கு வழிகாட்டிக் கொடுக்க வேணுமா?
வைகுண்டம் என்பது திருமா நகரம்.
வைகுண்டம் என்பது ஶ்ரீரங்கம்.
வைகை ஆற்றுத் தண்ணீர் வேகம் அதிகம், 21170
வைகை ஆற்று வெள்ளத்தில் பாலம் நிலைக்கிறது இல்லை.
வைகை ஆறு தாமிரபர்ணிக்கு மத்திமம்.