பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பழமொழிகள்

187


வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.

வைத்தியனுக்குச் சொர்க்கம் இல்லை; வாத்தியாருக்கு நரகம் இல்லை. 21225


வைத்தியனுக்குத் தன் ஒளஷதம் பலிக்காதாம்.

(மருந்து.)

வைத்தியனுக்கும் அஞ்ச வேண்டும்; வம்பலுக்கும் அஞ்ச வேன்டும்.

வைத்தியனுக்கு மோட்சம் இல்லை; வாத்திக்கு மோட்ச வழி உண்டு.

வைத்தியனுக்கு வந்தது அவன் தலையோடே.

வைத்தியனும் கைவிட்டால் ஆண்டவனே கதி. 21230


வைத்தியனைப் பெரியவன் என்பார் சிலர்; வாத்தியே பெரியவன் என்பார் சிலர்

வைத்திருந்த சொத்துக்கு வட்டி வளருமா?

வைத்தீசுவரன் கோவிலுக்குப் போயும் வயிற்று வலி தீரவில்லை.

வைத்துப் பார்க்கிறது விற்றுப் பார்.

வைத்து வாழ்ந்தவனும் இல்லை; கொடுத்துக் கெட்டவனும் இல்லை. 21235


வைத்து வைத்தவன் போல எடுத்துக் கொண்டான்.

வைதவனுக்குத்தானே வாய் நோவும்?

வைதாரையும் வாழ்க என வாழ்த்து.

வைதாரையும் வாழவைக்கும்; வாழ்ந்தாசைத் தாழவைக்கும். 21240


வைதால் வட்டி போச்சு: அடித்தால் அசல் போச்சு.

வைதிகம் என்றால் தெய்வ சமயம்.

வைதிகம், லெளகிகம் இரண்டும் வேண்டும்.

வைதிகம் வாழ்ந்து அறி.

(ஆய்ந்து.)

வைப்பாரை வைக்கிற வரிசை தெரியவில்லை; விளக்குமாறு சாத்துகிற மூலை தெரியவில்லை.

வைப்பு வரப்புப் பார்க்க வேண்டும். 21245


வைப்பு வாக்குப் பார்த்துப் பேச வேண்டும்.

வையகக் கூத்தே வயிற்றில் அடிக்கம்.

வையகத்தார் மழைக்கு என்ன செய்ய முடியும்?

வையகத்தில் எல்லோரும் ஒரு போக்கு அல்ல.

வையகத்தில் பொய் சொல்லாதவன் இல்லை. 21250