36
தமிழ்ப் பழமொழிகள்
மகிமையிலே ஒரு பெண் குவளையிலே வாழ்கிறாள்; அதிலும் ஒரு பெண் அறுத்துவிட்டு அழுகிறாள்.
மங்கம்மா காலத்துப் பேச்சு; எங்கம்மா காலத்தில் போச்சு.
மங்கம்மா சாலை மலைமேலே சோலை. 17705
மங்கம்மா வந்தாள்; தங்கமழை பெய்தது.
மங்கலம் முந்தியா? மண் முந்தியா?
மங்கலம் முதல் மணக்குடி வரை.
மங்கலமும் திருநாள்; மகள் வீடும் கல்யாணம்; அங்கேதான்
போவானா? இங்கேதான் வருவானா?
மங்கும் காலத்தில் மாப் பூக்கும்; பொங்கும் காலத்தில் புளி பூக்கும். 17710
மங்கும் காலம் மாங்காய்; பொங்கும் காலம் புளி.
மங்குலைக் கண்டி மயிலைப் போல ஆடுகிறாள்.
மங்கை தீட்டானால் கங்கையில் மூழ்குவாள்; கங்கை தீட்டானா எங்கே மூழ்குவாள்?
மங்கை நல்லாள் பெண் பெருமாள் வாழ்த்தெல்லாம்
எத்தனை நாள்? திங்கள் ஒரு பொழுதும் செவ்வாய் பகல் அறுதி, மங்கை முந்தியா. 17715
மங்கையர் கண் பெருவிரலைப் பார்க்கும் போதே கடைக்கண் உலகிெல்லாம் சுற்றும்.
மங்கையரில் மீனாட்சி; மாப்பிள்ளைகளில் சொக்கலிங்கம்.
மச்சக் காசில் மிச்சம் இருக்காது.
மச்சத்தின் குஞ்சுக்கு இப்படி என்றால் மாதாவுக்கு எப்படியோ?
மச்சம் விற்ற காசு மன்னனுக்கு ஆகாதா? 17720
மச்சான் அடித்தது உறைக்கவில்லை; மதனி சிரித்தது உறைத்ததாம்.
மச்சான் உறவு மலை மீதும் உண்டு.
மச்சான் செத்தால் மயிர் போச்சு: கம்பளி நமக்காச்சு.
மச்சானை நம்பினால் உச்சாணியில் இருக்கலாம்.
(கிருஷ்ணார்ஜூனர்.)
மச்சானைப் பார்கக உறவும் இல்லை; மயிரைப் பார்க்கக் கறுப்பும் இல்லை. 17725