பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

37


மச்சில் ஏற்றி ஏணியை வாங்கி விட்டால்.

மச்சினன் உண்டானால் மலை ஏறிப் பிழைக்கலாம்.

மச்சினன், தயவு உண்டானால் மலை மீதும் ஏறலாம்.

மச்சு ஏற்றி ஏணி களைவு.

(பழமொழி நானூறு. )

மச்சு விட்டில் குச்சு வீடு மேல். 17780


மச்சை அழித்தால் குச்சுக்கும் ஆகாது.

(ஆம்)

மச்சைப் பிரித்தால் குச்சும் ஆகாது.

மச நாய்க்குச் சாராயம் உற்றினாற்போல,

மச நாய் சாவது எப்போது? ஊர் சுத்தம் ஆவது எப்போது?

மசான வைராக்கியம். 17785


மசிர் விழுங்கினாற்போல் இருக்கிறது.

மஞ்சள் குளித்து மலைமேலே இருக்கும்போது மாட்டேன் என்றீரே;

பிள்ளை பெற்று நொந்திருக்கச்சே வேண்ட வந்தீரே.

(தோண்ட)

மஞ்சள் வைபபது மதவை நிலத்தில்.

மஞ்சளும் மலரும் கொண்டு துதிக்காவிட்டாலும் நெஞ்சில் நினைப்பதே போதும்.

மஞ்சனமும் மலரும் கொண்டு துதிக்காவிட்டாலும் நெஞ்சத்தில்

நினைப்பதே போதகம், 17740


மஞ்சு சுறுத்தால் மண்ணச்ச நல்லுருக்கு வேட்டிை.

(அரிசி விலையை ஏற்றுவார்கள்.)

மட்கி மண்ணாயிருக்கிறான்.

மட்டற்ற சேனை கிட்டிே இருந்தாலும் கட்டக் கயிறுடன் அட்டி

காசத்துடன் வருவான்.

மட்டாய் இருந்தது மதனி குடி வாழ்க்கை.

மட்டான போஜனம் மனசுக்கு மகிழ்ச்சி. 17745


மட்டி எருக்கிலை. மடல் மடலாய் பூத்தாலும் மருக்கொழுந்து வாசனை ஆகுமா?

(மானப் பூத்தாலும்.)

மட்டித் துலுககனும முட்டாவி நாயக்கனும் பட்டாளத்துக்குத் தான் லாயக்கு.

மட்டிப் பயலுக்குத் துட்டக் குருக்கள்.

மட்டியிலும் மட்டி மகா மட்டி.

மட்டு இல்லாமல் கொடுத்தாலும் திட்டுக் கேட்கலாகாது. 17750

(திட்டிக் கொடுத்தல் தகாது.)