பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தமிழ்ப் பழமொழிகள்


மனிதனை மனிதன் அறிவான்; மீனைப் புளியங்காய் அறியும்.

மனுஷ பலம் துர்ப்பலம். .

மனைக் கொடி இல்லா மனை பாழ். 18285

(வீடு.)


மனையால் அன்றோ தலை வெடித்ததாம்.

மனையாள் வாசல் மட்டும்; மகன் சுடுகாடு மட்டும்.

மனையாளுக்கு உற்றது ஒன்றும் சொல்ல வேண்டாம்; மாற்றானை ஒருநாளும் நம்ப வேண்டாம்.

(மற்றவனை.)

மனைவி இல்லாத புருஷன் அரை மனுஷன்.

மனைவி இறந்தால் மணம்; மகள் இறந்தால் பிணம். 18290


மனைவி உள்ளவன் விருத்துக்கு அஞ்சான்.

மனோராஜ்யம் பண்ணுகிறது போல.

மனோவியாதிக்கு மருந்து உண்டா?