இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58
தமிழ்ப் பழமொழிகள்
மனிதனை மனிதன் அறிவான்; மீனைப் புளியங்காய் அறியும்.
மனுஷ பலம் துர்ப்பலம். .
மனைக் கொடி இல்லா மனை பாழ். 18285
(வீடு.)
மனையால் அன்றோ தலை வெடித்ததாம்.
மனையாள் வாசல் மட்டும்; மகன் சுடுகாடு மட்டும்.
மனையாளுக்கு உற்றது ஒன்றும் சொல்ல வேண்டாம்; மாற்றானை ஒருநாளும் நம்ப வேண்டாம்.
(மற்றவனை.)
மனைவி இல்லாத புருஷன் அரை மனுஷன்.
மனைவி இறந்தால் மணம்; மகள் இறந்தால் பிணம். 18290
மனைவி உள்ளவன் விருத்துக்கு அஞ்சான்.
மனோராஜ்யம் பண்ணுகிறது போல.
மனோவியாதிக்கு மருந்து உண்டா?