பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

65


மாமியார் செத்ததற்கு மருமகன் அழுகிறது போல்.

(செத்து மருமகள் அழுதாளாம்.)

மாமியார் செத்த நாளும் இல்லை; நான் வாழ்ந்த நாளும் இல்லை;

மாமியார் தலையில் கையும் மாப்பிள்ளை மேலே சிந்தையும்.

மாமியார் தலையில் கையும் வேலிப் புறத்திலே கண்ணும். 18440


மாமியார் மதிலைத் தாண்டினால் மருமகள் குதிரைத் தாண்டுவான்.

மாமியார் மெச்சின மருமகள் இல்லை; மருமகன் மெச்சின மாமியாரும் இல்லை.

மாமியார் வீட்டில் முகம் தெரிந்து வா என்றானாம்; கஞ்சி குடிக்கும் போது முகம் தெரிகிறதென்று திரும்பினானாம் மகன்.

மாமியார் வீடு கைலாசம்.

மாமியார் வீடு மகா செளக்கியம்; நாலு நாள் சென்றால் நக்கலும் கக்கலும். 18445

(நாய் படாப் பாடு; நாய் பெறு சீலம்- யாழ்ப்பாண வழக்கு.)


மாமியாருக்குக் கண்ணும் மண்ணும் பிதுங்கிப் போகின்றன.

மாமியாருக் காரியம் இல்லை என்று கல்லும் நெல்லும் கலந்து வைத்தாளாம்.

மாமியாருக்குச் சாமியார் இவள்.

மாமியாருக்குப் புடைவை சோர்ந்த கதை.

மாமியாருக்கும் மாமியார் வேண்டும். 18450


மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.

(ஒரு காலம் ஒரு வீட்டுப் பெண்தான்.)

மாமியசரும் சாகாளோ? என் மனக் கவலையும் தீராதோ?

மாமியாரே, மாமியாரே. உனக்காக உடன் கட்டை ஏறுகிறேன்.

மாமியாரே, மாமியாரே, மை இட்டுக் கொள்கிறீர்களா? பொட்டு இட்டுக் கொள்கிறீர்களா?

மாமியாரைக் கட்ட வில்லை என்று மருமகன் தன் அரைஞாண் கயிற்றை அறுத்துத் தாலி கட்டினானாம். 18455


மாமியாரைக் கண்டு மருமகன் நாணுகிறதைப் போல.

(மருமகள்.)

மாமியாரோடு போகாத மாபாதகன்.

மாமியாரோதிக்கு மருமகள்தான்.

மாமேருவைச் சேர்ந்த காக்கையும் பொன் நிறம் ஆகும்.

(யாப்பருய கலக் காரிகை.)

மாய்மாலக் கண்ணி மருமகளே, கோழிக் கறிக்குப் பதம் பாரடி: கொக்கு என்கிறது. அத்தையாரே, கொத்த வருகிறது. அத்தை