தமிழ்ப் பழமொழிகள்
67
மார்மட்டும் சிநேகம் ஆனாலும் மடியிலே கை போடாதே.
மார்மேலும் தோள் மேலும் வளர்த்தாள் அருமையாய்.
மாரி அடைத்த வில் போட ஏரி உடைக்க மழை பெய்யும்.
மாரி இல்லையேல் காரியம் இல்லை.
மாரிக் காலத்தில் பதின்கல மோரும் கோடைக் காலத்தில் ஒரு படி நீரும் சரி. 18490
மாரி பதின்கல நீரில் கோடை ஒரு குடிநீர் வண்மை.
மாரி பொய்த்தாலும் மன் பொய்க்காது.
மாரி முரண்டுக்கு மருந்து உண்டா?
மாரிலே கொடி மாமனுக்கு ஆகாது.
மாரியாத்தாள் குழியில் மறைத்து வைக்க. 18495
மாரியாத்தாள் வாரிக் கொண்டு போக.
மாரியாத்தாளைப் பெண்டு பிடிக்கிறவனுக்குப் பூசாரி பெண்சாதி எம்மாத்திரம்?
மாரைத் தட்டி மனசில் வை.
மாரி மங்கலத்தாள் கொப்புக் கண்டெடுத்தாள்.
மாலுமி இல்லா மரக்கலம் ஓடாது. 18500
மாலை இட்ட நாள் முதல் தாரை இட்டு அழுதான்.
மாலை இட்டி பெண்சாதி காலனைப் போல் வந்தாள்.
மாலை உப்பு மழை அப்புறம், காலை உப்பு அடுத்து மழை.
மாலைக் கண்ணுக்கு மூலைச் சுவர்.
மாலைக் குளியனையும் மார்பில் மயிரனையும் நம்பகதே. 18505
மாலைக் கொசுக்கடி மழையைக் கொண்டு வரும்.
மாலைக் குளித்து மனையில் புகும், தன் மனையில் ஆரையும் சேர்க்காது.
மாலைச் செம்மேகம் மழை அறிகுறி, காலைச் செம்மேகம் கழுதை வாடை.
மாலை சுற்றிப் பிறந்த பிள்ளை மாமனுக்கு ஆகாது.
மாலையில் வந்த விருந்தும், காலையில் வந்த மழையும். 18510
மாவடை மரவடை
மாவடை இல்லா ஊருக்கு மணக்காச்சா வயிரம்.