தமிழ்ப் பழமொழிகள்
69
மாற்றானுக்கு இடம் கொடேல்
மாற்றானுக்கு மார்பில் ஆணியாய். 18540
மாற்றானை நம்பினாலும் மாதரை நம்பொணாது.
மாற்றிலே விளைவது மரத்திலே விளையுமா?
மாற்றைக் குறைத்தான் தட்டான், மாய் பாலம் கண்டான் செட்டி.
மாற்றைக் குறைத்தால் தட்டான். வாயிலே ஏய்த்தான் செட்டி.
மான் கண்ணிலும் அழகு; விரைவிலும் விரைவு. 18545
மான் கூட்டித்தில் புலி புகுந்தது போல.
மானசிக பூஜைக்கு அழுகல் வாழைப் பழம்.
மானத்தின கீழிருந்து மழைக்குப் பயந்தால் முடியுமா?
{{left margin|2em|(வானத்தின் கீழ்.)
மானத்தின் மேலே கண்ணும் மாப்பிள்ளை மேலே சிந்தையும்.
{{left margin|2em|(வானத்தின்.)
மானத்தை விட்டவனுக்கு மார் மட்டும் சோறு. 18550
மானத்தை விட்டால் மார்மட்டும் சோறு: வெட்கத்தை விட்டால்
வேண மட்டும் சோறு.
மானத்தை வில்லாய் வளைப்பான்; மணலைக் கயிறாய்த் திரிப்பான்.
மானத்தை விற்றால் கையளவு சோறு.
மானத்தோடு வாழ்பவனே மனிதன்.
மானம் அழிந்தபின் மரியாதை என்ன? 18555
மானம் அழிந்தபின் வாழாமை இனிதே.
மானம் அழிந்தாலும் மதி கெட்டுப் போகுமா?
மானம் அழிந்து வாழ்வதிலும் மரணம் அடைவது உத்தமம்.
மானம் அழியில் உயிர் காவலா? மானம் இழந்தபின் உயிர் வாழ்தல் ஏன்? 18560
மானம் தலைக்கு மேலே; வேட்கம் கட்கத்திலே.
மானம் பெரிது என்று மதித்தவர்க்குப் பிராணன் துரும்பு.
மானம் பெரிதோ, பிராணன் பெரிதோ?
மானம் போக வேணும்; வயிறு நிரம்ப வேணும்.
மானம் போன பிறகு பிராணன் இருந்து பயன் என்ன? 18565