பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தமிழ்ப் பழமொழிகள்


மான மழை நின்றாலும் மரமழை நில்லாது.

(வான மழை )

மானார் கலவியில் மயங்கி இருந்தாலும் தானே தருவான் சிவன் தன் பாதம்.

மானியம் வாங்கிப் பிழைப்பதிலும் வாணிகம் செய்து பிழைப்பது மேல்,

மானுக்கு ஒரு புள்ளி ஏறி என்ன, குறைந்து என்ன?

மானுஷ்யம் இல்லாதவன் மனுஷப் பதர். 18570


மானைக் காட்டிக் மானைப் பிடிப்பார்.

(கட்டி, பிடிப்பது போல.)

மானைத் தேடி மதம் கொள்கிறதா?