பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

87


முன்னால் பார்த்தால் சேவகன் குதிரை; பின்னால் பார்த்தால் செட்டியார் குதிரை.

முன்னால் போனவன் முட்டிக் கொண்டால் பின்னால்

போனவனுக்கு வெளிச்சம் பேண்ட்ட மாதிரி.

முன்னால் போனால் கடிக்கிறது: பிவினால் போனால் உதைக்கிறது .

(எறிகிறது.)

முன்னுக்கு ஒன்று பின்னுக்கு ஒன்று.

முன்னே ஆட்டைப் பிடி பின்னே மாட்டை பிடி. 18960


முன்னே ஒரு குறுணி; பின்னே ஒரு முக்குறுணி.

முன்னே பாசி, பின்னே பார். உன்னைப் பார் என்னைப் பார்.

முன்னே பசர்த்தால் முதலாளியில் குதிரை: பின்னே பார்த்தால்

அதிகாரியின் கழுதை,

முன்னே பிறந்த காதைப் பார்க்கிலும் பின்னே பிறந்த கொம்பு பலம்.

முன்னே பிறந்த காதிலும் பின்னே முனைத்து கொம்பு வலிது. 18985

(முன்னே முனைத்த.)


முன்னே போகிறவன் இடறி விழுந்தால் பின்னே போகிறவனுக்கு எச்சரிக்கை.

முன்னே போகிறவன் கீழே விழுந்தால் பின்னே போகிறவனுக்கு

அதிகாந்த வெளிச்சம்.

முன்னே போகிறவன் தீவட்டி பிடித்தால் பின்னே போகிறவனுக்கு வெளிச்சம்.

முன்னே போனால் சிசுஹத்தி; பின்னே போனால் பிரமஹத்தி.

முன்னே போனால் முடடும்; பின்னே போனால் உதைக்கும். 18970


முன்னே வந்த மரத்தைப் பார்க்கிலும்.பின்னே வந்த கொம்பு பலம்.

முன்னைக்குப் போ. முகட்டைக் குழகுழப்பு.

முனியாதார் முன்னியது எய்தாமை இல்லை.

(பழமொழி நானுசறு,

முனிவரும் முன்னுவ பொன்னால் முடியும்.

(திருக்கோவையார் .)