பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பேறுகளுள் இன்பம் அகத்தின்பாற் பட்டதாகும்; ஏனைய மூன்றும் புறத்தின்பாற் பட்டவையாகும். இவைபற்றி ஒவ்வொரு மொழியிலும் நூல்கள் தோன்றியுள்ளன. எனவே, மனிதனுடைய அநுப வங்களே இலக்கியமாகும். அந்த இலக்கிய நூல்கள் வாழ்க்கை இன்பத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றி யவையாகும். மனிதனுடைய அகவாழ்வு, புறவாழ்வு ஆகிய இரண்டும் இன்பத்தையே குறிக்கோளாகக் கொண்டவை. அந்த வாழ்வை விரித்து உரைப்பதே பொருளதிகாரத்தின் நோக்கமாகும்.

 பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையி யல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் அகத்திணையியல், கள வியல், கற்பியல், பொருளியல் என்பன அகப்பொருள் பற்றி யவை. புறத்திணையியலும் மரபியலும் புறப்பொருளைப் பற்றியவை. பிற இயல்கள் அகம் புறம் ஆகிய இரண்டையும் பற்றியவை.

நிலத்தின் பிரிவுகள் ஐந்து, அவற்றிற்குரிய பெரும் பொழுதுகள், சிறுபொழுதுகள், அங்கிலத்திற்குரிய தெய் வர்கள், அந்நிலத்தில் வாழும் விலங்குகள், பறவைகள்,

"குறிஞ்சி நிலக் கடவுளான முருகன் அல்லது வேலன் வேலைப் போர்க் கருவியாகவும் சேவலைக் கொடியாகவும் கொண்டவன். கி. மு. நாலாயிரத்துக்கு முற்பட்ட் ஆதிச்ச நல்லூர் நாகரிகத்தைச் சேர்ந்தபொருள்களில் இரும்பு வேல் களும் பித்தளையாற் செய்யப்பட்ட சேவல்களும் கிடைத் துள்ளன. இவை, முருக வழிபாடு மிகப் பழைய காலத்தி லிருந்தே தென்னாட்டவர்க்குரியதென்பதை மெய்ப்பிக் &sirspor.—K. A. N. Sastry, A History of S. India, p. 55. - மாயோன் வணக்கமும் வேத காலத்திற்கு முற்பட்டது.

—P. T. Srinivasa Ayyangar, Stone Age in India,

PP, 50–52.