172
தமிழ் மொழி-இலக்கிய வரலாறு
அவர்கள் தெளிவுற விளக்கி எழுதியிருத்தல் படித்து இன்புறத் தக்கது.[1]
வரலாற்றுப் பேராசிரியராகிய திரு. பி. டி. சீநிவாச அய்யங்கார், ‘உதியன் சேரல் பாரத வரலாற்றைக் கதகளி போன்ற நடிப்பு நாடகமாக நடத்தி அதன் இறுதியில் நடித்தவர்க்கும் பொதுமக்களுக்கும் பெருஞ்சோறு வழங்கி மிருத்தல் வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.[2] இக்கருத்துத் தவறு என்பதை மகாவித்துவான் அவர்கள் ‘தமிழ் வரலாறு’ என்னும் தமது நூலில் தக்க காரணம் காட்டி மறுத்துள்ளார்.[3]
உதியன் சேரலின் முன்னோன் ஒருவன் பெருஞ்சோறு கொடுத்த செயலை முடி நாகனார், பின்னோனாகிய உதியன் சேரல்மீது ஏற்றிக் கூறினார் என்று கூறுவாரும் உளர்.[4] இங்ஙனம் கருதுவதும் தவறு என்பதை மகாவித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்.[5] உதியன் சேரல் சேர மன்னருள் காலத்தால் மிகவும் முற்பட்டவன் என்பதை நினைவூட்டவே புறநானூற்றில் அவனைப் பற்றிய பாடல் கடவுள் வாழ்த்தை படுத்து முதற் பாடலாக வைக்கப்பெற்றுள்ளது போலும்! இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு
- ↑ தமிழ் வரலாறு, பக். 236-238
- ↑ History of the Tamils, pp. 491-494.
- ↑ பக். 233.
- ↑ K. A. N. Saatry, History of India, p. 113; History of s. India, p. 113; ‘முன்னோன் செய்த செயல்’ என்று இவரே ஒப்புக்கொள்வதால், பாரத காலத்தில் சேரர் இருந்தனர் என்பதை ஒப்புக்கொள்கிறார் என்பது இங்கு அறியத்தகும். எனவே, சேர, சோழ, பாண்டியர் பாரத காலத்துப் பழைமையுடையவர் என்பது கூறாமற் கூறிய வாறாகும்.
- ↑ தமிழ் வரலாறு, பக். 228-230.