பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 芷75

வான்மீகியார் காலம் ஏறக்குறையக் கி. மு. 600 என்ன abirth, 18

4. கெடியோன் (கி. மு. 850-300)

  • எங்கோ வாழிய குடுமி, தங்கோச்

செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் - நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.

என வரும் புறநானூற்று அடிகளிற் குறிக்கப்பெறும் நெடியோனைப் பற்றிச் சிலப்பதிகாரம்,30 முல்லைக்கலி(4). மதுரைக் காஞ்சி (வரி 768-781) முதலிய நூல்களிலும் குறிப்புகள் பலவாகக் காண்கின்றன. இவனே சயமா கீர்த்தி எனப்பட்டவன். இவன் பாக்கள் நற்றினையில் (105, 228) இரண்டுண்டு. இவன் 'கவியரங்கேறிய பாண்டியன்’ எனக் களவியல் உரை கூறல் காண்க. சயமா கீர்த்தி அல்லது ஐயமாகீர்த்தி என்பதில் உள்ள ஜய 21 என் பது யவத் (ஜாவா) தீவத்தின் பெயரால் கல்வெட்டு வல்லார் அறிந்தது. அங்குள்ள பிற்காலத்துக் கல்வெட்டு ஒன்று மின் இலச்சினையுடன் கிடைத்துள்ளது. இதனால், சயமா கீர்த்தி' என்பது ஐயஸ்தானத்து மகா கீர்த்தியன்’ என்னும் பொருளுடையதேயாகும்......இவன் அடியில் தன்னளவு

18. T. R. Sesha Ayyangar, Dravidian India, p.15.

19. முதற் கடல் கோளில் மதுரை அழிந்தது. அதன் நினைவாக இன்றைய மதுரை ஏற்பட்டது. அது போல்வே பஃறுளியாறும் நிலமும் கடலில் அழுந்திய பின்பு, நெடியோன், பஃறுளி என்னும் பெயர் கொண்ட புதிய யாற்றைத். தோற்றுவித்தான். அப் பெயர் காலப் போக்கில் பறளியாறு’ என மருவியது. அவ்யாறு நாஞ்சில் நாட்டிற் பாய்கிறது. அவ்யாறே இப்பாட்டிற் குறிக்கப்பட்டது எனல் பொருந்தும்.

20. சிலப் 11, வரி 17-22; அழற்படு காதை,

வரி 56-61. - -

21. G. E. Gerlni, Further India, p. 646.