பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

இந் நெடியோன் தொல்காப்பியர் காலத்தவன் என்று. மகா வித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் ஆராய்ந்து முடிவு கூறியுள்ளனர்.* தொல்காப்பியர் காலம் கி.மு.4ஆம் நூற்றாண்டு என்பது முன்பே குறிக்கப்பட்டது. எனவே, இவன் காலமும் அதுவே எனல் பொருத்தமாகும்.

கரிகாலன் (கி. பி. 75-115)

இவன் சிலப்பதிகாரம் கூறுமாறு. இமயம் சென்று மீண்ட பேரரசன். இவனே தொண்டை நாட்டை வளப்படுத்திச் சோணாட்டைப் பெருக்கிய பெருவீரன். இலங்கை அரசனான வசபன் (கி. பி.67-111) காலத்தில் சோழ மன்னன் தனது ஆட்சியை விரிவாக்கினான். அவன் இலங்கை மீது படையெடுக்கலாம் என்று அஞ்சிய வசபன் தன் படைகளைப் பெருக்கினான்: பாதுகாப்பை மிகுத்தான். வசபன் எதிர்பார்த்த சோழனது படையெடுப்பு அவன் மகனான வங்க நாசிக திஸ்ஸன் (கி. பி. 111-114) காலத்தில் நடை பெற்றது. அச்சோழன் பன்னிராயிரம் சிங்களவரைச் சிறை செய்து சோழ நாட்டிற்குக் கொண்டு சென்றான். அந்த அவமானத்தை நீக்க வங்கநாசிக திஸ்ஸன் மகனான கயவாகு வேந்தன் (கி. பி. 114-186) சோழ நாட்டின்மீது படையெடுத்துப் பன்னிராயிரம் தமிழரைச் சிறை செய்து இலங் கைக்குக் கொண்டுவந்தான் என்று இலங்கை வரலாறு கூறு கிறது.* ... "

சங்க காலத்தில் நாட்டை விரிவாக்கியவன் கரிகாலனே என்பது சங்கப் பாடல்களால் தெரிகிறது.

இப்பொழுதுள்ள கடப்பை, கர்நூல் மாவட்டங்கள் என்னும் பகுதி கரிகாலனால் செம்மைப்படுத்தப்பட்டது.

28. தமிழ்மொழி வரலாறு, பக்.922-848. 24. History of Ceylon, Vol 1, pp. 175—195.