இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
220
தமிழ் மொழி-இலக்கிய வரலாறு
“பொன்செய் கொல்லன் தன்சொல் கட்ட” -சிலம்பு, காதை 20, வரி 74
14.“ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தகமும்” 125
“ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது” -மணிமேகலை, காதை 2, வரி 42
உவமை முதலியன
நற்றிணைப் பாடல்களில் உள்ளத்தைக் கவரும் உவமை கள் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன (84, 97, 131, 184, 345). தற்குறிப்பேற்றம் (242), பிறிது மொழிதல் (286) போன்ற பிற அணிகள் சிலவும் இடம் பெற்றுள்ளன. இவை படித்துச் கவைத்தற்குரியன.
வட சொற்கள்
நற்றிணைப் பாடல்களில் மிகச் சிவ வட சொற்களே இடம் பெற்றுள்ளன . அவற்றுள் வதுவை (125), தவசியர் (141), சாபம் (228), பிரசம் - வண்டு (268), தாமம் (232), அற்சிரம் (312) என்பவை குறிப்பிடத் தக்கவை.