பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 223

என்னும் ஐவகை ஒழுக்கங்கள் தக்க இணையற்ற முறையில் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. பாடல்கள் சொற் செறிவும், பொருட் செறிவும் உடையவை. அகநானூற்றில் இடம் பெற்ற புலவர்கள்-158

1.அந்தியிளங்கீரனார் 2.அம்மூவனார் 3.அள்ளூர் நன்முல்லையார் 4.அண்டர் மகன் குறுவழுதியார் 5.அஞ்சியத்தை மகள் நாகையார் 6.அதியன் விண்ணத்தனார் 7.ஆலம்பேரி சாத்தனார் 8.ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் 9.ஆலங்குடி வங்கனார் 10.ஆவூர் மூலங்கிழார் 11.ஆமூர்க் கவுதமன் சாதேவனார் 12.ஆவூர் கிழார் மகனார் கண்ணனார் 13.ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் 14.இடைக்காடனார் 15.இடையன் நெடுங்கீரனார் 16.இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணார் 17.இறங்குகுடிக் குன்ற நாடன் 18.இடையன் சேந்தங்கொற்றனார் 19.இம்மென் கீரனார் 20.ஈழத்துப் பூதன் தேவனார் 21.உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் 22.உலோச்சனார் 23.உம்பற்காட்டு இளங் கண்ணனார் 24.உவர்க் கண்ணூர்ப் புல்லங்கீரனார் 25.உறையூர் மருத்துவன் தாமோதரனார் 26.உறையூர் முதுகூத்தனார் 27.ஊட்டியார் 28.எயினந்தை இளங்கீரனார் 29.எருமை வெளியனார் 30.எருமை வெளியனார் மகனார் கடலனார் 31.எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் 32.எழூஉப் புன்றி நாகன் குமரனார் 33.ஐயூர் முடவனார் 34. ஒக்கூர் மாசாத்தனார் 35.ஒரோடோகத்துக் கந்தரத்தனார் 36.ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் 37.ஒக்கூர் மாசாத்தியார் 38.ஓரம்போகியார்