இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
252
தமிழ்மொழி-இலக்கிய வரலாறு
5. "ஓர்வுற்று ஒருதிறம் ஒல்காத நேர்கோல்" 42
"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்" -திருக்குறள், 118
6. "காதல்கொள் வதுவை நாட் கலிங்கத்துள் ஒடுங் கிய மாதர்" 69.
"கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள்" அகம். 86
7. "முகந்தானே கொட்டிக் கொடுக்கும் குறிப்பு" 95
"அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்" -திருக்குறள், 706 கலித்தொகைப் பாக்களில் காணப்படும் சில கருத்து களும் தொடர்களும் சொற்களும் திரிகடுகம், தேவாரம் முதலிய பின் நூல்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்க :
1."கோளாளர் என்னொப்பார் இல்லென நம்மானுள்
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கொருநாள் கோளாளன் ஆகாமை இல்லை. அவற்கண்டு வேளாண்மை செய்தன
காண்."101
"தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது". -திரிகடுகம், 13. 2. "அன்னையும் அத்தனும் இல்லரா, யாய்கான"-115 "அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்." - -அப்பர் தேவாரம்.
வட சொற்கள் : ஐங்குறுநூறு முதலிய அகப்பொருள் நூல்களில் வடசொற்கள் மிகக் குறைந்து காணப்படுகின்றன.