பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு

5. "ஓர்வுற்று ஒருதிறம் ஒல்காத நேர்கோல்" 42

  "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்"      -திருக்குறள், 118 

6. "காதல்கொள் வதுவை நாட் கலிங்கத்துள் ஒடுங் கிய மாதர்" 69.

  "கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள்" அகம். 86

7. "முகந்தானே கொட்டிக் கொடுக்கும் குறிப்பு" 95

  "அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
  கடுத்தது காட்டும் முகம்" 
                -திருக்குறள், 706 
    கலித்தொகைப் பாக்களில் காணப்படும் சில கருத்து களும் தொடர்களும் சொற்களும் திரிகடுகம், தேவாரம் முதலிய பின் நூல்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்க :

1."கோளாளர் என்னொப்பார் இல்லென நம்மானுள்

  தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கொருநாள் 
  கோளாளன் ஆகாமை இல்லை. அவற்கண்டு 
  வேளாண்மை செய்தன

காண்."101

"தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்

வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் 
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் 
கேளாக வாழ்தல் இனிது".
                -திரிகடுகம், 13. 2. "அன்னையும் அத்தனும் இல்லரா, யாய்கான"-115 
  "அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்." - -அப்பர் தேவாரம்.

வட சொற்கள் : ஐங்குறுநூறு முதலிய அகப்பொருள் நூல்களில் வடசொற்கள் மிகக் குறைந்து காணப்படுகின்றன.