பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

253


கலித் தொகைப் பாக்களில் அவற்றைவிடச் சில சொற்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. இந்நூற்பாக்களில் வட நூற் கதைகளும் பிறவும் மிகுதியாக இடம் பெற்றிருத்தல் முன்பே குறிக்கப்பட்டதன்றோ? கடவுள் வாழ்த்து நீங்கிய இந்நூற்பாக்களில் காணப்படும் வடசொற்களுள் சிரகம்-பாத்திரம் [51] , காரணம் [60] , தம்பலம் [65] , பிசாசர் [65], குணங்கள் [71], வயந்தகம்-ஒருவகை அணி [79] , ஆரம்-மாலை [79] , நூபுரம்-சிலம்பு [83], வச்சிரம் [105], நேமி [105] சாமன்; காமன் [94] , மேகலை [96], உத்தி [97] , விச்சை-வித்தை [148], என்பவை குறிக்கத் தக்கவை.

காலம் செல்லச் செல்லத் தமிழர் வாழ்வில் வடசொற்களும் வடநூற் செய்திகளும் பிறவும் எங்ங்ணம் படிப்படியாக மிகுந்துவந்துள்ளன என்பதை இக் கலித்தொகைச்செய்திகள் நன்கு புலப்படுத்தல் காண்க.